கோவை செல்வபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் முப்பெரும் விழா கொண்டாட்டம்

முப்பெரும்விழாவையொட்டி பள்ளி மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி, கதை, கட்டுரை, நடனம், நாடகம், ஓவியம் உட்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. அதனைத்தொடர்ந்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.


கோவை: கோவை மாநகராட்சி 80வது வார்டுக்குட்பட்ட செல்வபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இலக்கிய மன்ற நிறைவு விழா, விளையாட்டு விழா மற்றும் ஆண்டு விழா என முப்பெரும் விழா இன்று (பிப்.8) பள்ளி வளாகத்தில் கொண்டாடப்பட்டது.

விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் தனலட்சுமி தலைமை தாங்கினார். விழாவையொட்டி பள்ளி மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி, கதை, கட்டுரை, நடனம், நாடகம், ஓவியம் உட்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. அதனைத்தொடர்ந்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.



நிகழ்ச்சியில் வார்டு கவுன்சிலரும், கோவை மாநகராட்சி பொது சுகாதார குழு தலைவருமான மாரிச்செல்வன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். இதில் 8ம் வகுப்பு மாணவி துர்கா ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை பெற்றார். இந்நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...