கலைத்திருவிழாவில் 20 கலைக் குழுவினரின் நையாண்டி மேளம், தோடா் நடனம், பரதம், துடும்பாட்டம், சிலம்பாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றுள்ளன.
கோவை: கோவையில் தமிழ் மண்ணின் கலைகளைக் கொண்டாடும் வகையில் 2 நாள்கள் நடைபெறும் கோயம்புத்தூா் சங்கமம் - நம்ம ஊரு திருவிழா நிகழ்ச்சி நேற்று (பிப்.10) தொடங்கியது.

கோவை மண்டல கலைப் பண்பாட்டுத் துறை சார்பில் வ.உ.சி. மைதானத்தில் நடைபெறும் இந்த விழாவை ஆட்சியா் கிராந்திகுமார் பாடி தொடங்கிவைத்து, 2022-23, 2023-24 ஆம் ஆண்டுக்கான கலை விருதாளா்களுக்கு விருது, விருதுத் தொகையை வழங்கினார்.
இதில் வீணை, நாடகம், குரலிசை, மேடை நாடகம், பரதம், நாட்டுப்புற நடனக் கலைஞா்களான எஸ்.ராதா வெங்கடேசன், அ.ராஜகோபால், குன்றக்குடி டி.எஸ்.ராமமூா்த்தி, கே.எஸ்.ரகுநாத், ஜி.டி.ராஜேந்திரன், கி.தங்கவேல், டி.பாபு, ம.ஜெயப்பிரகாஷ் நாராயணன், ஸ்ரீராம், மா.சரவணகுமார், நா.நவீன், அருண்குமார், கு.ஹா்சிதா, சி.பி.சுதந்திர நாச்சினி, எஸ்.கௌசிகா உள்ளிட்டோர் கலை முதுமணி, கலை நன்மணி, கலைச் சுடா்மணி, கலை வளா்மணி, கலை இளமணி உள்ளிட்ட விருதுகளைப் பெற்றனா்.

ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 11) இன்று வரை நடைபெறும் இந்த விழாவில் 20 கலைக் குழுக்கள் பங்கேற்று, நையாண்டி மேளம், தோடா் நடனம், பரதம், துடும்பாட்டம், சிலம்பாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளில் ஈடுபடுகின்றனா்.
மேலும் இதில் மண்டல கலை பண்பாட்டு மைய உதவி இயக்குநா் வ.கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட அலுவலா்கள் பங்கேற்றனா்.
கோவை மண்டல கலைப் பண்பாட்டுத் துறை சார்பில் வ.உ.சி. மைதானத்தில் நடைபெறும் இந்த விழாவை ஆட்சியா் கிராந்திகுமார் பாடி தொடங்கிவைத்து, 2022-23, 2023-24 ஆம் ஆண்டுக்கான கலை விருதாளா்களுக்கு விருது, விருதுத் தொகையை வழங்கினார்.
இதில் வீணை, நாடகம், குரலிசை, மேடை நாடகம், பரதம், நாட்டுப்புற நடனக் கலைஞா்களான எஸ்.ராதா வெங்கடேசன், அ.ராஜகோபால், குன்றக்குடி டி.எஸ்.ராமமூா்த்தி, கே.எஸ்.ரகுநாத், ஜி.டி.ராஜேந்திரன், கி.தங்கவேல், டி.பாபு, ம.ஜெயப்பிரகாஷ் நாராயணன், ஸ்ரீராம், மா.சரவணகுமார், நா.நவீன், அருண்குமார், கு.ஹா்சிதா, சி.பி.சுதந்திர நாச்சினி, எஸ்.கௌசிகா உள்ளிட்டோர் கலை முதுமணி, கலை நன்மணி, கலைச் சுடா்மணி, கலை வளா்மணி, கலை இளமணி உள்ளிட்ட விருதுகளைப் பெற்றனா்.
ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 11) இன்று வரை நடைபெறும் இந்த விழாவில் 20 கலைக் குழுக்கள் பங்கேற்று, நையாண்டி மேளம், தோடா் நடனம், பரதம், துடும்பாட்டம், சிலம்பாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளில் ஈடுபடுகின்றனா்.
மேலும் இதில் மண்டல கலை பண்பாட்டு மைய உதவி இயக்குநா் வ.கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட அலுவலா்கள் பங்கேற்றனா்.