பட்டா வழங்க கோரி கோவை மாவட்ட ஆட்சியரிடம் குறிச்சி உப்பிலிதிட்டு மக்கள் மனு

மதுக்கரை தாலூக்கா, குறிச்சி உப்பிலிதிட்டு பகுதியில் கடந்த 50 வருடங்களுக்கு மேலாக 200 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இதுவரை இந்தப்பகுதி மக்களுக்கு பட்டா வழங்காததால், பட்டா கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் அப்பகுதி மக்கள் மனு அளித்தனர்.


கோவை: 50 வருடங்களுக்கு மேலாக மதுக்கரை தாலுக்கா, குறிச்சி உப்பிலிதிட்டு பகுதியில் வசித்து வரும் நிலையில் தங்களுக்கு இதுவரை பட்டா வேண்டும் என பலமுறை மனு அளித்தும் பதில் இல்லை என்பதை சுட்டிக்காட்டி, கோவை மாவட்ட ஆட்சியரிடம் 200 குடும்பங்களை சார்ந்த பிரதிநிதிகள் இன்று (பிப்.12) நடைபெற்ற பொதுமக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி இடம் மனுவை வழங்கினர்.

அந்த மனுவில், கோவை மாவட்டம், மதுக்கரை தாலூக்கா, குறிச்சி, உப்பிலிதிட்டு பகுதியில் கடந்த 50 வருடங்களுக்கு மேலாக 200 குடும்பங்கள் வசித்து வருகிறோம். எங்களுக்கு அரசாங்கத்திடம் இருந்து ஆதார், மின் இணைப்பு, ரேசன் கார்டு, வீட்டு வரி, கேஸ் இணைப்பு என அனைத்தும் பல வருடங்களாக இங்கு குடியிருப்பதற்கு ஆதாரமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆயினும் நாங்கள் எங்கள் வீடுகளுக்கான பட்டாவானது இன்று வரை அரசாங்கத்திடம் இருந்து கிடைக்கப்படவில்லை. நாங்கள் வயதானவர்கள், குழந்தைகள் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பல முறை நேரில் முறையிட்டும் மனு அளித்தும் எந்தவித பலனும் இல்லாமல் போய் விட்டது.

ஆனால் எங்கள் பகுதியில் உள்ள க.ச.எண். 149க்கு பட்டா அளித்ததனை தாங்கள் கருத்தில் கொண்டு அதனை மேற்கோள்காட்டி மீதமுள்ள அனைத்து குடும்பங்களுக்கும் தாங்கள் முன் வந்து பட்டா அளிக்குமாறு மிகப் பணிவுடன் வேண்டி கேட்டுக்கொள்கிறோம் என குறிப்பிடப்பட்டிருந்தது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...