சீரான குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பக்கோதிபாளையம் கிராம மக்கள் சார் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை.

ஊராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால் சார் ஆட்சியரிடம் மனு அளிக்க வந்துள்ளோம். முறையாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்காமல் விட்டால் அடுத்த கட்ட போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று கிராம மக்கள் தெரிவித்தனர்.


கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள பக்கோதிபாளையம் கிராமத்தில் சுமார் 250 மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த சில மாதங்களாக குடிநீர் முறையாக வராததால் அதிக விலைக்கு பணம் கொடுத்து தண்ணீர் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.

இது குறித்து அரசு அதிகாரிகள், ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டுள்ளனர். ஆனால் பொது மக்களின் கோரிக்கைக்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் நேற்று காலி குடங்களுடன் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

சார் ஆட்சியரிடம் முறையாக குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கும்படி மனு அளித்தனர்.

ஜமீன் கோட்டாம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பக்கோதிபாளையம் கிராமத்தில் 250 குடும்பங்கள் உள்ளன. கடந்த சில மாதங்களாக முறையாக குடிநீர் வழங்கப்படுவதில்லை. இதுவரைக்கும் ஊராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால் சார் ஆட்சியரிடம் மனு அளிக்க வந்துள்ளோம். முறையாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்காமல் விட்டால் அடுத்த கட்ட போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று கிராம மக்கள் தெரிவித்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...