தாராபுரம் உடுமலை சாலையில் பட்டப்பகலில் அடுத்தடுத்து இரு இடங்களில் வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணம் திருட்டு

ஆத்திக்களம் பிரிவை அடுத்துள்ள சரவணா நகரில் சாமிநாதன் என்பவரின் வீட்டில் 20000 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் 2 சவரன் நகையை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் உடுமலை சாலை ஆத்திக்களம் பிரிவில் வசித்து வருபவர் காளிதாஸ் (40) இவர் தனியாக தொழில் செய்து வருகிறார்.

நேற்று குடும்பத்தினர் பகலில் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்று விட்டனர்.



பின்பு மாலையில் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது.

உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 5 ஆயிரம் ரூபாய், 30-ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள லேப்டாப் மற்றும் முப்பதாயிரம் மதிப்புள்ள எல்.சி.டி டிவியை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.



இதேபோல், காளிதாஸ் வீடு தாராபுரம் உடுமலை மெயின் ரோட்டில் உள்ளதால் பெரிய டிவியை கழட்டி மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.

இதேபோல் ஆத்திக்களம் பிரிவை அடுத்துள்ள சரவணா நகரை சேர்ந்த சாமிநாதன் (63) இவர் தனியார் கல்வி நிறுவனத்தில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார்.நேற்று பகலில் பள்ளி வாகனம் ஓட்டுவதற்காக சாமிநாதன் சென்று விட்டார்.

மனைவி தனலட்சுமி உறவினர் வீட்டிற்கு சென்று விட்டார். மீண்டும் மாலை வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது.

உள்ளே சென்று பார்த்தபோது ரூபாய் 20000-ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் 2-சவரன் நகையை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. பட்டப் பகலில் அடுத்தடுத்து இரண்டு இடங்களில் மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து பொருட்களை திருடி சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருட்டு சம்பவம் நடைபெற்ற இரண்டு இடங்களிலும் சிசிடிவி கேமராக்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் குறித்து தாராபுரம் குற்றப்பிரிவு போலீசார் மற்றும் அலங்கியம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...