கோவை பூ மார்க்கெட் அருகே டைல்ஸ் கடையில் பயங்கர தீ விபத்து

மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் கடைக்குள் வைத்திருந்த லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான டைல்ஸ்கள் மற்றும் ஹார்டுவேர்ஸ் பொருட்கள் முற்றிலும் எரிந்து நாசமாயின.


கோவை: கோவை பூ மார்க்கெட் அருகே தேவாங்க பேட்டை வீதியைச் சேர்ந்தவர் பியூஸ் ஆர். டாடேடு. இவர் அதே பகுதியில் உள்ள 3

மாடி கட்டிடத்தின் தரைத்தளத்தில் டைல்ஸ் மற்றும் ஹார்டுவேர்ஸ் கடை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் இன்று (29-02-2024) காலை 9 மணியளவில் இவரது கடையில் இருந்து கரும்புகை வெளியேறியது. பின்னர் சிறிது நேரத்தில் அந்த கடையில் இருந்து மளமளவென தீப்பற்றி எரிந்தது. இதனை பார்த்து அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இது குறித்து அவர்கள் கோவை தெற்கு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து தெற்கு உதவி மாவட்ட அலுவலர் அழகர்சாமி, நிலைய அலுவலர் ராமச்சந்திரன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

பின்னர் அவர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்ததால் அருகே உள்ள கட்டிடங்களுக்கு தீ வராமல் தவிர்க்கப்பட்டது.

இந்த தீ விபத்தில் கடைக்குள் வைத்திருந்த லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான டைல்ஸ்கள் மற்றும் ஹார்டுவேர்ஸ் பொருட்கள் முற்றிலும் எரிந்து நாசமாயின.

இதுகுறித்து ஆர்.எஸ். புரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். முதல் கட்ட விசாரணையில் இந்த தீ விபத்தானது மின் கசிவு காரணமாக ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் மின்வாரிய அதிகாரிகள் அங்கு சென்று அப்பகுதியில் உள்ள மின் இணைப்புகளை துண்டித்தனர்.

Newsletter

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...

விஷு பண்டிகைக்கு கோவையில் இருந்து 5 நாட்களில் 15 டன் காய்கறி,பழங்கள் ஷார்ஜாவுக்கு ஏற்றுமதி

மலையாள புத்தாண்டு விஷு பண்டிகை முன்னிட்டு கோவை விமான நிலையத்திலிருந்து கடந்த 5 நாட்களில் 15 டன் எடை கொண்ட காய்கறிகள் மற்...

கோவை பெரியநாயக்கன்பாளையத்தில்  கொடி அணிவகுப்பு..!

பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் எல்லை பாதுகாப்ப...

அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்த கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன்..!

வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன் நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியை சந்தித...

சின்னியம்பாளையம் அருகே இளைஞரிடம் செல்போன் மற்றும் ரூ.2,000 பறிப்பு - மூவர் மீது வழக்கு

கோவை சின்னியம்பாளையம் ஆர்.ஜி.புதூர் அருகே மூன்று பேர் கொண்ட கும்பல் இளைஞரை திடீரென வழிமறித்து விலை உயர்ந்த செல்போன் மற்ற...

கோவை நேரு நகரில் 8 பவுன் தங்கச் செயின் பறிப்பு - பீளமேடு போலீசார் தீவிர விசாரணை

கோவை நேரு நகர் மேற்கு பேருந்து நிறுத்தம் அருகே பைக்கில் சென்ற பெண்ணிடமிருந்து மர்ம நபர் 8 பவுன் தங்கச் செயினை பறித்து தப...