ஒப்பணக்கார வீதியில் கூடிய விரைவில் பெலிக்கன் சிக்னல் - மாநகர காவல் ஆணையர் தகவல்

ஒப்பணக்கார வீதியில் போக்குவரத்து காவலர்களுக்கு குளிர்சாதன வசதியுடன் கூடிய பூத் அமைக்கப்பட்டுள்ளதாகவும், இங்கு குறிப்பிட்ட எல்லைக்குள் இருக்கின்ற சிசிடிவி கேமராக்களை கண்காணிப்பதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.


கோவை: கோவை ஒப்பணக்கார வீதி பகுதியில் மாநகரப் போக்குவரத்து காவல்துறை சார்பில் போக்குவரத்து காவலர்கள் வெயில் காலத்தில் சிரமமின்றி பணி புரிவதற்காக குளிர்சாதன வசதியுடன் கூடிய, டிராபிக் பூத் அமைக்கப்பட்டுள்ளது. இதனை கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் திறந்து வைத்தார்.

இந்த பூத்தில் குறிப்பிட்ட எல்லைக்குள் உள்ள சிசிடிவி கேமராக்களை கண்காணிப்பதற்கான வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிகழ்வில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த காவல் ஆணையாளர், கோவை மாநகரில் போக்குவரத்தை சீர்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மாநகரப் போக்குவரத்து காவல்துறையினர் மேற்கொண்டு வருவதாகவும், பல்வேறு இடங்களில் பொதுமக்கள் பயன்படுத்தக்கூடிய பெலிக்கன் சிக்னல்களை பொருத்தி வருவதாகவும் தெரிவித்தார்.



அதன் தொடர்ச்சியாக இந்த பூத் அமைத்துக் கொடுத்த பிரகாஷ் ஏஜென்சி செந்தில்குமார் மேலாளர் ஒத்துழைப்போடு ஒப்பணக்கார வீதியில் போக்குவரத்து காவலர்களுக்கு குளிர்சாதன வசதியுடன் கூடிய பூத் அமைக்கப்பட்டுள்ளதாகவும், இங்கு குறிப்பிட்ட எல்லைக்குள் இருக்கின்ற சிசிடிவி கேமராக்களை கண்காணிப்பதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் கூடிய விரைவில் ஒப்பணக்கார வீதி பகுதியில் பொதுமக்கள் பயன்படுத்தும் பெலிகன் சிக்னல்களை அமைக்க உள்ளதாகவும் தெரிவித்தார். இது போன்ற குளிர்சாதன வசதி உடைய பூத்துகள் தொடர்ச்சியாக திறந்து வைக்கப்பட இருப்பதாகவும், அதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

Newsletter

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...

ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி தொடக்கம்: 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி இன்று (மே 18) தொடங்கி மே 28 வரை நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வசத...