கோவையில் சமூக வலைதளங்களில் தவறான செய்திகள் பகிரப்படுவதை தடுக்கவும், மாவட்டம் முழுவதும் இளைஞர் மத்தியில் நிலவும் சிக்கல்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் SOCIAL MEDIA INFLUECER-கள் உடன் மாவட்ட நிர்வாகத்தினர் கலந்துரையாடினர்.
கோவை: கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில், சமூக வலைதள கணக்காளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நேற்று (மார்ச்.1) மதியம் 12 மணியளவில் நடைபெற்றது.

இதில் கோவையில் சமூக வலைதளங்களில் தவறான செய்திகள் பகிரப்படுவதை தடுக்கவும், மாவட்டம் முழுவதும் இளைஞர் மத்தியில் நிலவும் சிக்கல்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் SOCIAL MEDIA INFLUECER-கள் உடன் மாவட்ட நிர்வாகத்தினர் கலந்துரையாடினர்.

இந்த நிகழ்வில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார், மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் ஆகியோர் முன்னிலையில் இந்த கலந்துரையாடல் நிகழ்ந்தது.
சமூக வலைதளங்களில் அதிக பின் தொடர்பவர்களை கொண்ட இன்ஸ்டாகிராம், பேஸ்புக், யூடியூப் பக்கங்களின் அட்மின்கள் சுமார் 70 பேர் இதில் பங்கேற்றனர். மேலும் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பல்வேறு விதமான வதந்திகளும் உறுதிப்படுத்தப்படாத செய்திகளும் சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில் அவற்றை தடுக்க ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

மேலும் இளைஞர்கள் அதிகமானோர் சமூக வலைதளங்களை பயன்படுத்தக்கூடிய சூழலில் போதைப் பொருள் பயன்பாட்டை தடுப்பது, சாலை விபத்துகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவது போன்ற முக்கிய அம்சங்கள் இதில் பேசப்பட்டன.
எந்த ஒரு தகவலையும் உறுதிப்படுத்திக் கொள்ள சமூக வலைதளங்களில் போடும் போதும் மாவட்ட நிர்வாகத்தின் சமூக வலைதள கணக்குகளை TAG செய்யுமாறு அதிகாரிகள் அறிவுரை வழங்கினர்.
இதில் கோவையில் சமூக வலைதளங்களில் தவறான செய்திகள் பகிரப்படுவதை தடுக்கவும், மாவட்டம் முழுவதும் இளைஞர் மத்தியில் நிலவும் சிக்கல்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் SOCIAL MEDIA INFLUECER-கள் உடன் மாவட்ட நிர்வாகத்தினர் கலந்துரையாடினர்.
இந்த நிகழ்வில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார், மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் ஆகியோர் முன்னிலையில் இந்த கலந்துரையாடல் நிகழ்ந்தது.
சமூக வலைதளங்களில் அதிக பின் தொடர்பவர்களை கொண்ட இன்ஸ்டாகிராம், பேஸ்புக், யூடியூப் பக்கங்களின் அட்மின்கள் சுமார் 70 பேர் இதில் பங்கேற்றனர். மேலும் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பல்வேறு விதமான வதந்திகளும் உறுதிப்படுத்தப்படாத செய்திகளும் சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில் அவற்றை தடுக்க ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
மேலும் இளைஞர்கள் அதிகமானோர் சமூக வலைதளங்களை பயன்படுத்தக்கூடிய சூழலில் போதைப் பொருள் பயன்பாட்டை தடுப்பது, சாலை விபத்துகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவது போன்ற முக்கிய அம்சங்கள் இதில் பேசப்பட்டன.
எந்த ஒரு தகவலையும் உறுதிப்படுத்திக் கொள்ள சமூக வலைதளங்களில் போடும் போதும் மாவட்ட நிர்வாகத்தின் சமூக வலைதள கணக்குகளை TAG செய்யுமாறு அதிகாரிகள் அறிவுரை வழங்கினர்.