நாடாளுமன்றத் தேர்தலில் கோவையில் திமுக நிற்க வேண்டும் என திமுகவினருக்கு ஆசை – கோவையில் அமைச்சர் முத்துசாமி பேட்டி

கோடைகாலத்தில் தண்ணீர் பற்றாக்குறையை தீர்ப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட ஆட்சியர் துறை அதிகாரிகளை அழைத்து பேசியிருக்கிறார். குடிநீர் பற்றாக்குறை ஏற்படாதவாறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.


கோவை: கோவையில் செய்தியாளர்களிடம் அமைச்சர் முத்துசாமி பேசினார். அப்போது அவர் பேசியாதவது, கோவை மாநகராட்சிக்கு உட்பட பகுதிகளில் இன்று 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1178 பணிகள் துவக்கி வைக்கப்படுகிறது. இந்த பணிகள் முடிவு வரும் போது பெரும்பாலான பிரச்சனைகள் தீர்க்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.

குடிநீருக்காக சாலைகள் தோண்டப்படும் நிலையில் அதை சரி செய்வதற்காக 40 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு வந்த பணிகளும் துவக்கப்படுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

தமிழ்நாடு முழுவதும் மாநகராட்சி பகுதிகளில் இதே போன்று பணிகள் நடைபெறுகிறது.

கோவை மாநிலத்தில் மிக அதிகமான அக்கறை எடுத்துக்கொண்டு அரசியல் சார்பாக பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. கோடைகாலத்தில் வரும் தண்ணீர் பற்றாக்குறையை தீர்ப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏற்கனவே மாவட்ட ஆட்சியர் துறை அதிகாரிகளை அழைத்து பேசியிருக்கிறார். குடிநீர் பற்றாக்குறை ஏற்படாதவாறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

அணைகளில் தண்ணீர் குறைகிற போது மாற்று ஏற்பாடு செய்யப்படுவது என்பது அதில் பல சிக்கல்கள் இருக்கிறது. வேறு இடத்தில் இருந்து தண்ணீர் எடுக்கும் போது எதிர்ப்பு வருகிறது. இருந்தாலும் மக்களுக்கு குடிநீர் தருவது அத்தியாவசியம் என்ற காரணத்தால் அதற்கான ஏற்பாடுகளை மாவட்ட ஆட்சியர் மேற்கொள்வார்.



பிரதமர் மோடி கொடுக்கிறேன் என்பதை கொடுத்தால் பொதுமக்கள் நம்புவார்கள். அதை இன்னும் தரவில்லை. இது போன்ற குற்றச்சாட்டுகளை இங்கே வந்து பேசுவது பிரதம அமைச்சர் அளவில் இதுபோன்று நாம் பார்த்ததில்லை.

எத்தனையோ பிரதமர்கள் இருந்திருக்கிறார்கள். ஒரு மாநில கட்சியை ஒரு கட்சியின் தலைவரை இவ்வாறு நேரடியாக வந்து இல்லாத குற்றச்சாட்டுகளை அவ்வளவு நாகரிகமானது அல்ல.

அவர் பிரதமராக இருப்பதால் இதற்கு மேல் நாங்கள் கூறுவதும் நாகரீகம் அல்ல. பிரதமர் மோடி அதை அவ்வளவு பெரிய அரசியல் மேடையாக வைத்துக் கொண்டு பேசியிருக்கக் கூடாது- திமுக கொள்ளை அடித்த பணத்தை மக்களிடத்திலேயே ஒப்படைப்போம் என நேற்று பிரதமர் பேசியது தொடர்பாக அமைச்சர் பதிலளித்துள்ளார்.

பிரதமர் தொடர்ச்சியாக தமிழகம் வருவது நாடாளுமன்ற தேர்தலில் கண்டிப்பாக பாதிப்பை ஏற்படுத்தாது. இந்த பாதிப்புகளை எல்லாம் எதிர்நோக்கி தான் திமுக இருக்கிறது. திமுக எதற்கும் சலித்து போனது இல்லை.

மக்களுக்கு கடுமையாக கடந்த மூன்று ஆண்டுகளாக உழைத்திருக்கிறார் பல திட்டங்களை கொண்டு வந்திருக்கிறார்.

வேறு எந்த மாநிலங்களிலும் இல்லாத மகளிர் உரிமைத் தொகை, கட்டணமில்லா பேருந்து, கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம், நான் முதல்வன் திட்டங்களை முதல்வர் தந்திருக்கிறார்.

இதற்கு மேல் வேறு யாரானும் செய்திருக்கிறார்கள் அல்லது அருகில் உள்ள மாநிலங்களில் செய்திருக்கிறார்கள் என்றால் சொல்லட்டும். மக்களே சொல்லட்டும். கோவையில் திமுக போட்டியிட வேண்டும் என திமுகவினர் விரும்புகிறார்கள் என்ற கேள்விக்கு, தோழமைக் கட்சிகளுடன் தலைமை பேசி வருகிறது. தோழமைக் கட்சிகளின் மற்றும் எங்கள் தலைமை சேர்ந்து எடுக்க வேண்டிய முடிவு.

கோவையில் திமுக நிற்க வேண்டும் என திமுகவினருக்கு ஆசை உண்டு. அதற்காக கூட்டணியில் சென்றால் உடன்பாட்டில் செல்வது அவ்வாறு சென்றால் 100% இன்று வெற்றி பெறச் செய்ய உழைப்பாளர்கள்.

தலைமை என்ன முடிவெடுக்கிறதோ அதை நாங்கள் அமல்படுத்துவோம். இவ்வாறு அமைச்சர் முத்துசாமி பேசினார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...