உடுமலையில் தக்காளி விலை கடும் சரிவு - சாலையில் கொட்டப்படும் அவலம்

கடந்த சில மாதங்களுக்கு முன்பு 14 கிலோ கொண்ட தக்காளி பெட்டி ரூ.300க்கும் அதிகமாக விற்று வந்த நிலையில் தற்பொழுது 14 கிலோ கொண்ட ஒரு பெட்டி தக்காளி ரூ.150 முதல் ரூ.200 வரை விற்பனையாகிறது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த கண்ணமநாயக்கனூர், ஆண்டிய கவுண்டனூர், பாப்பான்குளம், மருள்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் ஆண்டு முழுவதும் தக்காளி சாகுபடி பிரதானமாக உள்ளது.

இந்த பகுதிகளில் விளையும் தக்காளி பழங்களை உடுமலை தினசரி சந்தையில் கொண்டுவரப்பட்டு அங்கிருந்து வியாபாரிகள் மூலம் தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்யப்படுகிறது. கேரளா மாநிலம் மறையூர், மூணாறு உட்பட பல்வேறு பகுதிகளுக்கும் இங்கிருந்து தக்காளி அனுப்பி வைக்கப்படுகிறது.

போக்குவரத்து மற்றும் தேவையை பொருத்து தினசரி விலை நிர்ணயம் செய்யப்படுகின்றது. இந்த நிலையில் தற்சமயம் விலை கடும் சரிவை சந்தித்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு 14 கிலோ கொண்ட தக்காளி பெட்டி 300க்கும் அதிகமாக விற்று வந்த நிலையில் தற்பொழுது 14 கிலோ கொண்ட ஒரு பெட்டி தக்காளி 150 முதல் 200 வரை விற்பனையாகிறது.



இதனால் போக்குவரத்து செலவு, சுங்கம், கூலி என செலவு செய்து சந்தைக்கு கொண்டு வந்து நஷ்டத்துடன் அடைவதைவிட சாலை ஓரத்தில் வீசி எறிவது சிறந்தது என்று விவசாயிகள் முடிவு செய்து தற்சமயம் உடுமலை பழனிசாலையில் பல இடங்களில் கொட்டி வருகின்றனர்.

எனவே உடுமலை பகுதி தக்காளி விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான தக்காளி சந்தை உருவாக்கி இருப்பு வைக்க குளிர்சாதன கிடங்கு அமைத்து உரிய விலை கிடைக்கும் பகுதிகளுக்கு அனுப்பி வைக்கவும், மதிப்பு கூட்டு பொருட்கள் உற்பத்தியை ஊக்குவிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...