கோவை மாநகராட்சி வ.உ.சி பகுதியில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக தோண்டிய குழியில் சிக்கிய வாகனங்கள்

வ.உ.சி பகுதியில் இருந்து காவலர் குடியிருப்புக்கு செல்லும் சாலையில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட குழியில் மாநகராட்சியின் குப்பை சேகரிக்கும் வாகனம் ஒன்று சிக்கியது. பின் தொடர்ந்து வந்த தனியார் பள்ளி வாகனமும் குழியில் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.


கோவை: கோவை மாநகராட்சியில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக பல்வேறு இடங்களில் குழிகள் தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. பல்வேறு இடங்களில் பணிகள் நிறைவடைந்து இருந்தாலும் குழிகள் சரிவர மூடப்படாததால் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று (மார்ச்.6) காலை கோவை மாநகராட்சி வஉசி பகுதியில் இருந்து காவலர் குடியிருப்புக்கு செல்லும் சாலையில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட குழியில் மாநகராட்சியின் குப்பை சேகரிக்கும் வாகனம் ஒன்று சிக்கியது.



அதேசமயம் அந்த வாகனத்தை பின் தொடர்ந்து வந்த தனியார் பள்ளி வாகனமும் குழியில் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் டிராக்டர் உதவியுடன் குழியில் சிக்கிய குப்பை சேகரிக்கும் வாகனம் வெளியில் எடுக்கப்பட்டது. பின்னர் பள்ளி வாகனமும் சாமர்த்தியமாக வெளியேற்றப்பட்டுள்ளது.

குழிகள் தோண்டப்பட்டு பணிகள் மேற்கொள்ளும் போது தடுப்புகள் அமைக்க வேண்டும் எனவும், அவ்வாறு அமைக்கும் பட்சத்தில் இது போன்ற விபத்துகளை தவிர்க்கலாம் எனவும் அப்பகுதி மக்கள் தெரிவித்து வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...