அப்பநாயக்கன்பாளையத்தில் ரூ.14.60 லட்சத்தில் சமுதாயக் கூடம் பராமரிப்பு பணி - மேயர் கல்பனா தொடங்கி வைப்பு

பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று 1வது வார்டு மாமன்ற உறுப்பினர் கற்பகம் முயற்சியில் ரூ.14.60 லட்சம் மதிப்பில் சமுதாய கூடத்தை பழுது பார்த்தல் மற்றும் பராமரித்தல் வேலை தொடங்கப்பட்டது. மேயர் கல்பனா ஆனந்தகுமார் பூமி பூஜை செய்து பாராமரிப்பு பணியை தொடங்கி வைத்து பழுதடைந்த சமுதாய கூடத்தை பார்வையிட்டார்.


கோவை: கோவை துடியலூர் அடுத்துள்ள அப்பநாயக்கன்பாளையம் மாநகராட்சி 1வது வார்டில் அரிஜன காலனி பகுதியில் 15 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட சமுதாய நலக்கூடம் உள்ளது. இது தற்போது கதவுகள் உடைந்து பழுதடைந்து பயனற்ற நிலையில் உள்ளது.

இந்த நிலையில் அப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று 1வது வார்டு மாமன்ற உறுப்பினர் கற்பகம் முயற்சியில் ரூ.14.60 லட்சம் மதிப்பில் சமுதாய கூடத்தை பழுது பார்த்தல் மற்றும் பராமரித்தல் வேலை தொடங்கப்பட்டது. இதற்காக நடைபெற்ற பூமி பூஜைக்கு 1வது வார்டு மாமன்ற உறுப்பினர் கற்பகம் இராஜசேகரன் தலைமை வகித்தார். பகுதி கழக செயலாளர் அருள்குமார் முன்னிலை வகித்தார்.மேயர் கல்பனா ஆனந்தகுமார் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்து பழுதடைந்திருந்த சமுதாய கூடத்தை பார்வையிட்டார்.



இந்த நிகழ்ச்சியில் மாமன்ற உறுப்பினர்கள் சித்ராதங்கவேலு, சாந்தாமணி பச்சைமுத்து, வட்ட கழக செயலாளர் ப.இராஜசேகரன், சுற்றுச்சூழல் அணி மாவட்ட துணை அமைப்பாளர் பிரபாகரன், மாநகராட்சி உதவி ஆணையாளர் ஸ்ரீதேவி, அதிகாரிகள் எழில், ஜெயின்ராஜ், ராதாகிருஷ்ணன், பவுன்ராஜ், மற்றும் கூட்டணி கட்சிகளான ம.தி.மு.க – வில் இருந்து லோகநாதன், தங்கவேல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இராஜா, மகேஸ்வரன், திமுக கட்சி நிர்வாகிகள் சம்பத்குமார், வெங்கடேஷ், ஜெயக்குமார், சின்னச்சாமி, காளிமுத்துசாமி, சண்முகசுந்தரம், ஆனந்தன், ராஜ்கண்ணன், தமிழ்நிதி, லட்சுமணன், சின்னு, கார்த்திக், சாம்ராஜ், இளைஞரணி நிரிவாகிகள் சுபாஷ்கண்ணன், ஜெய்பிரகாஷ், ஆனந்தன், ஜீவானந்தம், அஜய்ஹரிகரன், அன்பு, தங்கராஜ், திவாகர், தீபக், மோகன், மதன், அரவிந்த் உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.

Newsletter

செவித்திறன் குறைபாடுடையோருக்கு வேலைவாய்ப்பு: Lakshmi Ring Travellers நிறுவனத்தின் 'நம்ம லாண்டரி' சேவை

கோவையில் Lakshmi Ring Travellers நிறுவனம், செவித்திறன் மற்றும் பேச்சுத்திறன் குறைபாடுடையோருக்காக 'நம்ம லாண்டரி' என்ற சலவ...

மேட்டுப்பாளையம் தொகுதியில் டி.ஆர்.எஸ் சுயேட்சை வேட்பாளராக களமிறக்கம்

மேட்டுப்பாளையம் தொகுதியில் திமுக போட்டியிட வாய்ப்பு மறுத்ததால், கட்சியை விட்டு வெளியேறிய டி.ஆர். சண்முகசுந்தரம் இன்று சு...

மேட்டுப்பாளையம் தொகுதியில் Kavitha Kalyanasundaram வேட்பு மனு தாக்கல்

கோவை வடக்கு மாவட்டம் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் Kavitha Kalyanasundar...

மேட்டுப்பாளையம் தொகுதி அதிருப்திக்குப் பிறகு ராஜினாமா: திமுக T R சண்முகசுந்தரம் தனியாக போட்டி?

குடும்ப சூழ்நிலை மற்றும் பணி சுமை காரணமாக திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் பதவியிலிருந்தும் கட்சியிலிருந்தும் TR சண்முகச...

கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக வேட்பாளர் கனிமொழி வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கனிமொழி, சனிக்கிழமை கோட்டாட்சியர் வ...

கோவை வடக்கில் போட்டியிடும் வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி பதிவு

பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், கோவை வடக்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்த கட்சித் தலைவர்களுக்கு நன்ற...