கோவை மாநகர ஆயுதப்படை கவாத்து மைதானத்தில் துவங்கிய மாரத்தான் போட்டி, டாக்டர் பாலசுந்தரம் ரோடு, அவிநாசி ரோடு, ரேஸ்கோர்ஸ் ஆகிய பகுதிகளுக்கு சென்று மீண்டும் கோவை மாநகர ஆயுதப்படை கவாத்து மைதானத்தில் நிறைவு பெற்றது.
கோவை: பெண்களுக்கு மரியாதை செலுத்து விதமாக மகளிர் தினம் நாடும் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதனை ஊக்குவிக்கும் வகையில் கோவை மாநகர ஆயுதப்படையில் பணியாற்றி வரும் பெண் காவலர்களுக்கான மரத்தான் ஓட்டம் இன்று நடைபெற்றது.
மாரத்தான் ஓட்டத்தை கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலக தலைமையிடம் துணை ஆணையாளர் சுகாசினி துவங்கி வைத்தார். மரத்தான் ஓட்டத்தில் ஏராளமான ஆயுதப்படை பெண் காவலர்கள் கலந்து கொண்டு ஓடினர்.

இந்த மாரத்தான் ஓட்டம் கோவை மாநகர ஆயுதப்படை கவாத்து மைதானத்தில் துவங்கி டாக்டர் பாலசுந்தரம் ரோடு, அவிநாசி ரோடு, ரேஸ்கோர்ஸ் ஆகிய பகுதிகளுக்கு சென்று மீண்டும் கோவை மாநகர ஆயுதப்படை கவாத்து மைதானத்தில் நிறைவு பெற்றது.
மரத்தான் ஓட்டத்தில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற பெண் காவலர்களுக்கு காவலர் ஆணையர் பாலகிருஷ்ணன் பரிசுகள் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாநகரத் துணை ஆணையாளர் சரவணன், ஆயுதப் படை உதவி ஆணையாளர் சேகர், ஆய்வாளர் பிரதாப் கோவிந்தராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மாரத்தான் ஓட்டத்தை கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலக தலைமையிடம் துணை ஆணையாளர் சுகாசினி துவங்கி வைத்தார். மரத்தான் ஓட்டத்தில் ஏராளமான ஆயுதப்படை பெண் காவலர்கள் கலந்து கொண்டு ஓடினர்.
இந்த மாரத்தான் ஓட்டம் கோவை மாநகர ஆயுதப்படை கவாத்து மைதானத்தில் துவங்கி டாக்டர் பாலசுந்தரம் ரோடு, அவிநாசி ரோடு, ரேஸ்கோர்ஸ் ஆகிய பகுதிகளுக்கு சென்று மீண்டும் கோவை மாநகர ஆயுதப்படை கவாத்து மைதானத்தில் நிறைவு பெற்றது.
மரத்தான் ஓட்டத்தில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற பெண் காவலர்களுக்கு காவலர் ஆணையர் பாலகிருஷ்ணன் பரிசுகள் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாநகரத் துணை ஆணையாளர் சரவணன், ஆயுதப் படை உதவி ஆணையாளர் சேகர், ஆய்வாளர் பிரதாப் கோவிந்தராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.