மடத்துக்குளம் அருகே பாஜகவினர் போராட்டம் - திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ரேக்ளா பந்தயம் ரத்து

மைவாடி பிரிவு பகுதியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திமுக சார்பில் ரேக்ளாழ பந்தயம் நேற்று நடைபெற இருந்தது. ஆனால் அனுமதி இல்லாமல் பந்தயம் நடத்துவதாக கூறி பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மடத்துக்குளத்தை அடுத்த மைவாடி பிரிவு பகுதியில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மடத்துக்குளம் மேற்கு ஒன்றிய திமுக சார்பில் ரேக்ளா பந்தயம் நடைபெற இருந்தது.



இந்த நிலையில் முறையான அனுமதி இல்லாமல் நடத்தப்படுவதாக தகவல் அறிந்த மடத்துக்குளம், உடுமலை பகுதி பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து ரேக்ளா பந்தயம் நடைபெறும் இடத்தில் போராட்டத்தில் ஈடுபட முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.



அப்போது காவல்துறையினருக்கும் பாஜகவினருக்கும் இடையே சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த உடுமலை காவல்துறை கண்காணிப்பாளர் சுகுமாரன் போராட்டத்தில் ஈடுபட முயற்சி செய்த திருப்பூர் தெற்கு மாவட்ட பொதுச் செயலாளர் வடுகநாதன், உடுமலை நகர பாஜக தலைவர் கண்ணாயிரம் மற்றும் பாஜக நிர்வாகிகள் 14 பேரை கைது செய்தனர்.

மேலும் பாஜகவினர் கூறுகையில், திமுக சார்பில் நடத்தப்படும் ரேக்ளா பந்தயம் முறையான அனுமதி இல்லாமல் நடத்தப்படுகின்றது. எனவே முறையான அனுமதியோடு நடத்தப்பட வேண்டும். காவல்துறையினர் ரேக்ளா பந்தயம் நடத்த அனுமதி வழங்கினால் கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பாஜகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் தெரிவித்தனர்.



இந்த நிலையில் ரேக்ளா பந்தயம் நடத்த பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்த காரணமாக திமுக சார்பில் நடைபெற இருந்த ரேக்ளா பந்தயம் ரத்து செய்யபட்டதாக காவல்துறை தரப்பில் அறிவிக்கப்பட்டது.



உடுமலை அருகே திமுக சார்பில் நடைபெற இருந்த ரேக்ளா பந்தயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் நேற்று அதிகாலையில் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...