ஜல்லிபட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பாலியல் வன்கொடுமைக்கு எதிராக விழிப்புணர்வு - உடுமலை ஒன்றிய குழு தலைவர் பங்கேற்பு

ஜல்லிபட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமைக்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில் நடனம், குறும்படம் மற்றும் வினாடி வினா போன்ற நிகழ்ச்சிகள் நடத்தபட்டது.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை ஜிவிஜி விசாலாட்சி மகளிர் கல்லூரி கணினி பயன்பாட்டு துறை மற்றும் டாக்டர் அப்துல் கலாம் பாதுகாப்பு சேவை அறக்கட்டளை இணைந்து இமைகள் திட்டத்தின் கீழ் மூன்றாம் ஆண்டு மாணவியர் ஜல்லிபட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமைக்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில் நடனம், குறும்படம் மற்றும் வினாடி வினா போன்ற நிகழ்ச்சிகள் நடத்தபட்டது.



மேலும் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கேடயம் மற்றும் பதக்கங்களை உடுமலை ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மகாலட்சுமி முருகன், பிரியா பாராமெடிக்கல் இன்ஸ்டியூட் முதல்வர் தவசிமணி, அப்துல் கலாம் அறக்கட்டளை நிறுவனர் நவநீதன், ஆடிட்டர் கண்ணன் ஆகியோர் வழங்கினர்.

ஜல்லிப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பழனிச்சாமி மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஜிவிஜி விசாலாட்சி மகளிர் கல்லூரி கணினி பயன்பாட்டு துறை தலைமை பேராசிரியர் முனைவர் மணிமேகலை, வடிவு, கனக துர்கா, நித்யா ஆகியோர் செய்திருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...