கோவை கோர்ட்டுக்குள் போலி வக்கீல்கள் நுழைவதை தடுக்க க்யூ.ஆர். ஸ்டிக்கர்

கடைகளில் விற்கக்கூடிய வழக்கறிஞர் ஸ்டிக்கர்களை வாங்கி கொண்டு வழக்கறிஞர்களாக இல்லாதவர்களும் நீதிமன்ற வளாகத்திற்குள் வாகனங்களை நிறுத்துவதால் தங்களது வாகனங்களை நிறுத்துவதில் சிரமம் ஏற்படுவதாக வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.


கோவை: கோயமுத்தூர் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் வழக்கறிஞர்களின் வாகனங்களுக்கு க்யூஆர் அடங்கிய ஸ்டிக்கர் வழங்கும் நிகழ்ச்சி கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு இன்று (மார்ச்.14) நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் நீதிபதி சசிரேகா,கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த க்யூஆர் கோடை ஸ்கேன் செய்தால் வழக்கறிஞர்களின் சுய விவரங்கள் தெரிந்து விடும்.

இது குறித்து வழக்கறிஞர்கள் கூறுகையில், கடைகளில் விற்கக்கூடிய வழக்கறிஞர் ஸ்டிக்கர்களை வாங்கி கொண்டு வழக்கறிஞர்களாக இல்லாதவர்களும் நீதிமன்ற வளாகத்திற்குள் வாகனங்களை நிறுத்தி விடுவதாகவும், இதனால் வழக்கறிஞர்கள் அவர்களின் வாகனங்களை நிறுத்துவதற்கு கடும் சிரமம் ஏற்படுவதாக தெரிவித்தனர்.

இதனை தடுப்பதற்கு காவல்துறையிடம் தெரிவித்ததை தொடர்ந்து வழக்கறிஞர்களும் காவல்துறையினரும் இணைந்து இது போன்ற ஒரு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் வழக்கறிஞர்களாக இல்லாதவர்கள் அவர்களின் வாகனங்களை நீதிமன்றத்திற்கு உள்ளேயோ அல்லது நீதிமன்றத்தை சுற்றியோ வழக்கறிஞர்கள் என்று கூறிக்கொண்டு நிறுத்தி விட முடியாது என தெரிவித்துள்ளனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...