கோவையில் கடும் வெயிலால் பட்டுக்கூடு உற்பத்தி பாதிப்பு – ஒரு கிலோ பட்டுக்கூடு ரூ.500-க்கு விற்பனை

இன்று (14-03-2024) ஒருகிலோ பட்டுக்கூடு விலை குறைந்தபட்சமாக ரூ.340-க்கும், சராசரியாக ரூ.432-க்கும், அதிகப்பட்டசமாக ரூ.500-க்கும் ஏலம் போனது என்று பட்டு வளர்ச்சித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


கோவை: கோவை மாவட்டத்தில் பட்டுக்கூடு உற்பத்தியில் கணிசமான விவசாயிகள் ஈடுபட்டு வருகிறார்கள். அதன்படி கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, தொண்டாமுத்தூர், அன்னூர், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட

இடங்களில் பட்டுப்புழுக்களை வளர்த்து பட்டுக்கூடுகளை உற்பத்தி செய்கிறார்கள்.

அவ்வாறு உற்பத்தி செய்யும் பட்டுக்கூடுகளை கோவை பாலசுந்தரம் சாலையில் உள்ள பட்டுவளர்ச்சித்துறை அலுவலகத்தில் செயல்பட்டு வரும் பட்டுக்கூடு அங்காடியில் விற்று வருவாயை பெருக்கி வருகின்றனர்.

இந்த நிலையில் பட்டுக்கூடுகள் கடந்த மாதம் ஒரு கிலோ குறைந்தபட்சமாக ரூ.370-க்கும், அதிகபட்சமாக ரூ.475 வரைக்கும் விற்றது. இந்த நிலையில் தற்போது இதன் விலை சற்று அதிகரித்துள்ளது. அதன்படி ஒரு கிலோ ரூ.500-க்கு விற்கிறது. இதனால் விவசாயிகள் பலர் பட்டுக்கூடுகளை அதிகம் உற்பத்தி செய்து விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.

பட்டுக்கூடு விலை உயர்வு குறித்து பட்டு வளர்ச்சித்துறை அதிகாரிகள் கூறுகையில், கோவை பட்டுக்கூடு விற்பனை அங்காடிக்கு கோவை மட்டுமின்றி திருப்பூர் மாவட்டம் அவினாசி, உடுமலைப்பேட்டை, திண்டுக்கல் மாவட்டம் பழனி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் உற்பத்தி செய்யும் பட்டுக்கூடுகளை விற்பனை செய்து வருகிறார்கள்.

வழக்கமாக பட்டு நூல் விலை அதிகமாக இருக்கும் போது பட்டுக்கூடு விலையும் அதிகரிக்கும். ஆனால் தற்போது பட்டுநூலின் விலை குறைந்து உள்ளது. இருந்தபோதிலும் கடும் வெயில்

காரணமாக பட்டுக்கூடு உற்பத்தி வெகுவாக குறைந்து உள்ளது. இதன் காரணமாக பட்டுக்கூடு விலை கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக உயர்ந்து உள்ளது.

அதன்படி இன்று (14-03-2024) ஒருகிலோ பட்டுக்கூடு விலை குறைந்தபட்சமாக ரூ.340-க்கும், சராசரியாக ரூ.432-க்கும், அதிகப்பட்டசமாக ரூ.500-க்கும் ஏலம் போனது என்றனர். பட்டுக்கூடு விலை ஏறுமுகத்தில் உள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...