கோவையில் வரும் 18-ம் தேதி பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுப்பு - நீநிமன்றத்தில் பாஜக வழக்கு

பிரதமரின் ரோட்ஷோ நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பாஜகவினர் வழக்கு தொடுத்துள்ளனர். இந்த வழக்கு அவரச வழக்காக இன்று மாலை 4.30 மணிக்கு விசாரிக்கப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ளது.


கோவை: கோவையில் வரும் 18-ம் தேதி கவுண்டம்பாளையம் ஹவுசிங் யூனிட் முதல் ஆர்.எஸ்.புரம் வரை நான்கு கிலோ மீட்டர் தூரத்திற்கு ரோட் ஷோ மற்றும் அதனைத்தொடர்ந்து பொதுக்கூட்டம் நடைபெற இருந்தது. இதற்காக பாஜக சார்பில் அனுமதி கேட்டு கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் கடிதம் வழங்கியிருந்த நிலையில், பிரதமரின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல், பொதுத்தேர்வு மற்றும் இதுவரை கோவையில் ரோட் ஷோ நடத்த அனுமதி வழங்கியத்தில்லை உள்ளிட்ட காரணங்களை கூறி ரோட் ஷோ நடத்த காவல்துறை அனுமதி மறுத்தது.

இந்த நிலையில் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் மற்றும் காவல் அதிகாரிகளுடன் மத்திய சிறப்பு பாதுகாப்பு படை ஐஜி லவ் குமார் தலைமையிலான எஸ்.பி.ஜி குழுவினர் ஆலோசனை நடத்தினர்.



சுமார் இரண்டு மணி நேர ஆலோசனைக்கு பிறகு அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டனர். பிரதமர் நிகழ்ச்சிக்கான அனுமதி மறுப்பு மற்றும் மத்திய பாதுகாப்பு குழுவினருடனான ஆலோசனை தொடர்பாக மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணனிடம் கருத்து கேட்க முற்பட்டபோது தெளிவான ஒரு முடிவை இல்லாமல் கருத்து கூற முடியாது எனக் கூறி சென்றார்.

இதனையடுத்து பாஜக மாநகர் மாவட்ட தலைவர் ரமேஷ் தலைமையிலான பாஜகவினர் கோவை மாநகர காவல் ஆணையரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தைக்குபிறகு இது தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பாஜக மாநகர் மாவட்ட தலைவர் ரமேஷ் கூறி சென்றார்.

இதனிடையே பிரதமரின் ரோட்ஷோ நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பாஜகவினர் வழக்கு தொடுத்துள்ளனர். இந்த வழக்கு அவரச வழக்காக இன்று மாலை 4.30 மணிக்கு விசாரிக்கப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...