கோவை விஜயா வாசகர் வட்டத்தின் 2024-ஆம் ஆண்டுக்கான உலக புத்தக தின விருதுகள் அறிவிப்பு

ஜெயகாந்தன் விருதுக்கு எழுத்தாளா் எஸ்.சங்கரநாராயணன் (சென்னை), புதுமைப்பித்தன் விருதுக்கு எழுத்தாளா் மயிலன் எ.சின்னப்பன் (திருச்சி), மீரா விருதுக்கு கவிஞா் மா.ஸ்டாலின் சரவணன் (புதுக்கோட்டை) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.


கோவை: கோவை விஜயா வாசகா் வட்டத்தின் 2024-ஆம் ஆண்டுக்கான உலக புத்தக தின விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது குறித்து விஜயா பதிப்பக நிறுவனா் மு.வேலாயுதம் (மார்ச்.19) கூறியிருப்பதாவது, உலக புத்தக தினத்தை (ஏப்ரல் 23) முன்னிட்டு ஆண்டுதோறும் கோவை விஜயா பதிப்பகத்தின் விஜயா வாசகா் வட்டம் சார்பில் எழுத்தாளா்கள் ஜெயகாந்தன், மீரா, புதுமைப்பித்தன் ஆகியோரின் பெயரால் எழுத்தாளா்களுக்கு விருதும், பரிசுத் தொகையும் வழங்கப்பட்டு வருகிறது. இது தவிர சிறந்த விற்பனையாளருக்கு வானதி விருதும், சிறந்த நூலகருக்கு சக்தி வை.கோவிந்தன் விருதும் வழங்கப்படுகிறது.

2024-ஆம் ஆண்டுக்கான விஜயா வாசகா் வட்ட விருதுகளுக்கான எழுத்தாளா்களைத் தோ்வுக் குழு தோ்ந்தெடுத்துள்ளது. அதன்படி ஜெயகாந்தன் விருதுக்கு எழுத்தாளா் எஸ். சங்கரநாராயணன் (சென்னை), புதுமைப்பித்தன் விருதுக்கு எழுத்தாளா் மயிலன் எ.சின்னப்பன் (திருச்சி), மீரா விருதுக்கு கவிஞா் மா.ஸ்டாலின் சரவணன் (புதுக்கோட்டை) ஆகியோர் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

சிறந்த புத்தக விற்பனையாளருக்கான வானதி விருது கும்பகோணம் ஸ்ரீ மார்க்கண்டேயா புக் கேலரி ஜே.கல்யாணசுந்தரத்துக்கும், சிறந்த நூலகருக்கான சக்தி வை.கோவிந்தன் விருது, சென்னை திருவொற்றியூா் முழுநேர அரசு கிளை நூலகத்தின் இரண்டாம் நிலை நூலகா் பா.பேனிக் பாண்டியனுக்கும் வழங்கப்பட உள்ளது.

ஜெயகாந்தன் விருதுக்கு ரூ.1 லட்சம், புதுமைப்பித்தன், மீரா, வானதி, சக்தி வை.கோவிந்தன் விருதுகளுக்கு தலா ரூ.25 ஆயிரமும் ரொக்கப் பரிசு வழங்கப்படுகிறது. 9-ஆவது ஆண்டாக நடைபெற இருக்கும் விஜயா வாசகா் வட்ட விருதுகள் வழங்கும் விழா, உலக புத்தக தினமான ஏப்ரல் 23-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) ராஜ வீதி விஜயா பதிப்பகத்தின் மேல்தளத்தில் உள்ள ரோஜா முத்தையா அரங்கில் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.

Newsletter

“நாங்கள் கட்சிக்காக வாக்கு கேட்கவில்லை; அடுத்த தலைமுறைக்காக வாக்கு கேட்கிறோம்” – கோவையில் சுப. வீரபாண்டியன் விமர்சனம்

கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் செந்தில் பாலாஜியை ஆதரித்து, திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டி...

சிங்காநல்லூர் தொகுதி: மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆவாரம்பாளையத்தில் வாக்கு சேகரிப்பு

சிங்காநல்லூர் தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆதரவாக ஆவாரம்பாளையம் பகுதியில் தீவிர...

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...