திருப்பூரில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டுவரப்பட்ட 3,81,200 ரூபாய் பணம் பறிமுதல்

திருப்பூர் காங்கேயம் சாலை பகுதியில், பிஎன் ரோடு பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவர் நான்கு சக்கர வாகனத்தில் கொண்டுவரப்பட்ட 3 லட்சத்து 6 ஆயிரத்து 500 ரூபாய் பணத்தை நிலை கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்தனர்.



திருப்பூர்: தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் முதல் கட்டமாக நடைபெற உள்ள நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. இதன் காரணமாக திருப்பூர் மாவட்டத்தில் 64 பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் சுழற்சி அடிப்படையில் சோதனை தீவிர படுத்தப்பட்டுள்ளது.



இந்நிலையில் திருப்பூர் காங்கேயம் சாலை பகுதியில் நிலை கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது பிஎன் ரோடு பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவர் நான்கு சக்கர வாகனத்தில் 3 லட்சத்து 6 ஆயிரத்து 500 ருபாய் பணத்தை உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வந்ததை தொடர்ந்து அதனை நிலை கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்தனர்.



இதே போல் செந்தில்குமார் என்பவர் 74 ஆயிரத்து 600 ரூபாய் பணத்திற்கான உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வந்ததை தொடர்ந்து அதையும் பறிமுதல் செய்த நிலை கண்காணிப்பு குழுவினர், பறிமுதல் செய்யப்பட்ட 3 லட்சத்து 81 ஆயிரத்து 200 ரூபாய் பணத்தை மாநகராட்சி ஆணையாளரும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரமான பவன் குமாரிடம் ஒப்படைத்தனர்.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...