உடுமலையில் அடுத்தடுத்த மூன்று வீடுகளில் 44 பவுன் நகை, ரூ. 2 லட்சம் ரொக்கம் திருட்டு - பொதுமக்கள் அச்சம்..!

இது குறித்து தகவல் அறிந்த உடுமலை போலீஸ் துணை சூப்பிரண்டு ஜெ.சுகுமாறன், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜீவானந்தம் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர விசாரணை.


திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த எஸ்.வி.புரம்,பி.வி.லே-அவுட்டைச் சேர்ந்தவர் சாந்தாமணி(52). இவர் நேற்று முன்தினம் மாலை வீட்டை பூட்டிக்கொண்டு உறவினர் வீட்டுக்கு சென்றதாக தெரிகிறது. இதனிடையே, இன்று மதியம் 12 மணியளவில் வீட்டுக்கு திரும்பி வந்துள்ளார்.

அப்போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்திருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 40 பவுன் நகை மற்றும் ரூ 1 லட்சத்து 55 ஆயிரம் ரொக்கம் திருடு போனது தெரியவந்தது.

இதே போன்று, எஸ்.வி.புரம், ஆர்.ஜி.நகர் பகுதியைச் சேர்ந்தவர் சத்யாதேவி(29). இவர் கடந்த 16-ம் தேதி வீட்டை பூட்டிக் கொண்டு புதுக்கோட்டைக்கு சென்றதாக தெரிகிறது. பின்னர், இன்று மதியம் வீட்டுக்கு திரும்பி வந்துள்ளார்.



அப்போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 2 பவுன் நகை மற்றும் 25 ஆயிரம் பணம் திருடு போனது தெரிய வந்தது.

இதே போல, எஸ்.வி.புரம், கணேசாபுரம் பகுதியை சேர்ந்தவர் நாச்சம்மாள்(75). இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டை பூட்டிக் கொண்டு அவரது மகன் வீட்டுக்கு சென்றுள்ளார். இதனிடையே இன்று காலை வீட்டுக்கு திரும்பி வந்த போது, கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.



இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த ரொக்கம் ரூ 36 ஆயிரம் திருடு போனது தெரிய வந்தது.



இது குறித்து தகவல் அறிந்த உடுமலை போலீஸ் துணை சூப்பிரண்டு ஜெ.சுகுமாறன், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜீவானந்தம் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

எஸ்.வி.புரம் பகுதியில் ஒரே இரவில் அடுத்தடுத்த வீடுகளில் நடந்த திருட்டுச் சம்பவத்தால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

Newsletter

“நாங்கள் கட்சிக்காக வாக்கு கேட்கவில்லை; அடுத்த தலைமுறைக்காக வாக்கு கேட்கிறோம்” – கோவையில் சுப. வீரபாண்டியன் விமர்சனம்

கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் செந்தில் பாலாஜியை ஆதரித்து, திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டி...

சிங்காநல்லூர் தொகுதி: மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆவாரம்பாளையத்தில் வாக்கு சேகரிப்பு

சிங்காநல்லூர் தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆதரவாக ஆவாரம்பாளையம் பகுதியில் தீவிர...

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...