நாடாளுமன்ற தேர்தல்; கோவை தொகுதிக்கு போட்டியிடும் திமுக வேட்பாளர் ராஜ்குமார் அறிமுக கூட்டம்..!

இந்த கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர்கள் தேர்தலுக்கான பிரச்சாரத்தை எவ்வாறு முன்னெடுப்பது என்பது குறித்த கருத்துரை வழங்கினர்.


கோவை: கோவை காளப்பட்டி சாலையில் உள்ள தனியார் ஹால் வளாகத்தில் கோவை மக்களவை தொகுதி இண்டியா கூட்டணி திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் அறிமுக கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி, தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, செய்தி மக்கள் தொடர்புத் துறை அமைச்சர் சாமிநாதன், மேயர் கல்பனா, கோவை மக்களவை தொகுதி சிபிஎம் எம்.பி., நடராஜன் உள்ளிட்ட இண்டியா கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் பங்கேற்பவர்கள் தேர்தலுக்கான பிரச்சாரத்தை எவ்வாறு முன்னெடுப்பது குறித்த கருத்துரை வழங்கினர்.

இதில் அமைச்சர் முத்துசாமி உரையாற்றிய போது, அமைச்சர் ராஜா உயரத்திற்கு கோவை மக்களவை தொகுதியின் வெற்றி இருக்கும். வேட்பாளருக்கு வெறுமனே கும்பிடு மட்டும் தான் போடுவார்கள் என நினைத்தேன்.

ஆனால், கூட்டணி தலைவர்கள் இணைந்து கையை உயர்த்தியது வெற்றியை உறுதி அளித்தது. குழுக்கள் வீடு வீடாக சந்திப்பது தான் வெற்றியை தரும், வாக்குகளை சேகரிக்க வேண்டும்

மக்களை தினந்தோறும் சந்தித்து 5 நிமிடங்கள் பார்த்தால் தான் வெற்றியை கொடுக்கும்

செந்தில் பாலாஜி நிறைய பணிகளை செய்தார், இன்றும் அவர் கோவையை பற்றி நினைத்து வருவார்,

திமுக உட்பட கூட்டணி தொண்டர்கள் மீறி எதையும் செய்ய முடியாது என என்னால் நிச்சயமாக உணர்ந்து உள்ளோம்.



பொள்ளாச்சியில் முதல்வரின் கருத்துக்கு எதிர்த்தரப்பினருக்கு பயம் வந்தது. பயம் இருப்பதால் தான் நம் ஊரையே சுற்றி சுற்றி வருகின்றனர். எத்தனை ஆயிரம் கூட்டம் நடத்தினாலும், நாம் தான் 40 லும் வெற்றி பெறுவோம்

வீடு வீடாக தாய்மார்களை சந்திக்க வேண்டும் என்ற பொறுப்பு உள்ளது, அந்த வாக்கு நமக்கு கிடைக்காது என்றால் 5 முறையாவது மீண்டும் மீண்டும் சென்று திமுகவிற்கு வாக்களிக்க வேண்டும் என்பதை உருவாக்க வேண்டும்.

12 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கி வருகிற 12ஆம் தேதி முதல்வர் கூட்டம் கோவையில் நடைபெறவுள்ளது.

சிறு சிறு வேலைகளை எங்கேயோ நடப்பதை நியாபகம் வைத்து செயல்படுத்தும் முதல்வர் இதுவரை இல்லை. ஆனால், முதல்வர் ஸ்டாலின் ஒவ்வொரு வேலையையும் பார்த்து வருகிறார்

கோவை மாவட்டத்தில் சட்டமன்றத்தில் நாம் தவற விட்டிருக்கலாம். ஆனால், முதல் நிகழ்ச்சி என்பது வாக்களிக்காதவர்கள் என யார் இருக்கிறார்களோ, அவர்களுக்கு நான் உழைக்க நினைக்கிறேன் என முதல் கூட்டத்தை கோவையில் நடத்தினார்.

திமுக வெற்றி பெற்றதால் தான், மத்தியில் நமக்கு தேவையான திட்டங்களை கேட்டு பெற முடியும்

எல்லாரும் கோவை மண்டலம் என சொல்கிறார்கள், ஆனால் இந்த கூட்டத்தை பார்த்தால் திமுகவிற்கு முதல் வெற்றி கோவையிலிருந்து வர முடியும் என்று தெரிவித்தார்.

Newsletter

“நாங்கள் கட்சிக்காக வாக்கு கேட்கவில்லை; அடுத்த தலைமுறைக்காக வாக்கு கேட்கிறோம்” – கோவையில் சுப. வீரபாண்டியன் விமர்சனம்

கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் செந்தில் பாலாஜியை ஆதரித்து, திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டி...

சிங்காநல்லூர் தொகுதி: மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆவாரம்பாளையத்தில் வாக்கு சேகரிப்பு

சிங்காநல்லூர் தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆதரவாக ஆவாரம்பாளையம் பகுதியில் தீவிர...

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...