கோவை துடியலூர் அருகே கள் இறக்கி விற்பனை செய்த நபர் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிப்பு..!

ஒவ்வொரு தேர்தலின் போதும், ஆட்சி அமைக்கும் கட்சியினர் விவசாயிகளுக்கு கள் இறக்க அனுமதி வழங்குவோம் என்று கூறுகிறார்கள். ஆனால் இதுவரை அனுமதி வழங்கவில்லை என்று நாராயணசாமி நாயுடு விவசாயிகள் சங்கம் மாநில தலைவர் ஏ.எஸ்.பாபு கூறினார்.


கோவை: கோவை துடியலூர் அருகே வெள்ளக்கிணர் பகுதியில் தோட்டத்தில் தென்னை மரங்களில் கள் இறக்கி விற்பனை செய்து வருவதாக கார்த்திக் என்பவரை துடியலூர் போலீசார் கைது செய்து காவல் நிலைய ஜாமினில் விடுவித்தனர்.

கோவை துடியலூர் அடுத்துள்ள வெள்ளகிணர் பகுதியில் வசிப்பவர் அர்ஜுனன். இவரது மகன் கார்த்திக். இவர்கள் தங்கள் தோட்டத்தில் விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில் தோட்டத்தில் கள் இறக்கிக்கொண்டு இருக்கும் போது துடியலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, இதற்கு அனுமதியில்லை என்று கூறியுள்ளனர்.

அதன்பிறகு கார்த்திக்கை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று வழக்கு பதிவு செய்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்ததும் நாராயணசாமி நாயுடு விவசாயிகள் சங்கம் மாநில தலைவர் ஏ.எஸ்.பாபு தலைமையில் விவசாயிகள் அனைவரும் துடியலூர் காவல்நிலையத்திற்கு வந்தனர்.



இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து காவல்துறை அதிகாரிகளிடம் பேசினர். பின்னர், வழக்குப் பதிவு செய்யப்பட்ட கார்த்திக் காவல்நிலைய ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.

இதுகுறித்து நாராயணசாமி நாயுடு விவசாயிகள் சங்கம் மாநில தலைவர் ஏ.எஸ்.பாபு பேசுகையில், கர்நாடகா, ஆந்திரா மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கள் மற்றும் நீரா பானம் இறக்க அனுமதி உள்ளது. ஆனால் தமிழ்நாட்டிற்கு மட்டும் இல்லை. தொடர்ந்து நாங்கள் அனுமதி கேட்டு வருகின்றோம். ஒவ்வொரு தேர்தல் நடைபெறும்போது, ஆட்சி அமைக்கும் கட்சியினர் விவசாயிகளுக்கு கள் இறக்க அனுமதி வழங்குவோம் என்று கூறுகிறார்கள். ஆனால் இதுவரை இல்லை. கள் இறக்குதல் என்பது விவசாயிகளின் உரிமை போராட்டம் ஆகும். காவல்துறை தலையிட்டால் கடுமையான போராட்டம் செய்வோம் என்று கூறினர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...