பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, கோயம்புத்தூரின் வளர்ச்சிக்கான திட்டங்களைச் செயல்படுத்தத் தயாராக இருப்பதாக கோயம்புத்தூர் கிரடாய் அமைப்பின் சார்பில் நடந்த கூட்டத்தில் பேச்சு.
கோவை: கோயம்புத்தூர் கிரடாய் அமைப்பின் சார்பில் நடந்த கூட்டத்தில் பங்கேற்று, கோயம்புத்தூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த, கட்டுமானத் துறையில் சிறந்து விளங்கும் தொழில் முனைவோர்கள் மத்தியில் பா.ஜ.க மாநிலத் தலைவரும், கோவை வேட்பாளருமான அண்ணாமலை உரையாற்றினார்.
பல்வேறு தொழில் நிறுவனங்கள், 200க்கும் அதிகமான கல்வி நிலையங்கள், இயற்கை வளங்கள் என வளர்ச்சிக்குத் தேவையான அத்தனை வளங்களும் இருந்தும், கோயம்புத்தூர் தனது முழுமையான வளர்ச்சியைப் பெற முடியாததின் காரணங்கள் குறித்துப் பேசினார்.

மேலும், கோயம்புத்தூரின் வளர்ச்சியை நோக்கமாகக் கொண்ட திட்டங்களை செயல்படுத்த இத்தனை ஆண்டுகள் எந்தக் கட்சிகளும் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை விளக்கினார்.
அதேபோல, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, கோயம்புத்தூரின் வளர்ச்சிக்கான திட்டங்களைச் செயல்படுத்தத் தயாராக இருப்பதையும், அதற்குத் தேவையான தொலை நோக்குப் பார்வை உடையவர்களை, மக்கள் பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுக்க வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துக் கூறினார்.
பல்வேறு தொழில் நிறுவனங்கள், 200க்கும் அதிகமான கல்வி நிலையங்கள், இயற்கை வளங்கள் என வளர்ச்சிக்குத் தேவையான அத்தனை வளங்களும் இருந்தும், கோயம்புத்தூர் தனது முழுமையான வளர்ச்சியைப் பெற முடியாததின் காரணங்கள் குறித்துப் பேசினார்.
மேலும், கோயம்புத்தூரின் வளர்ச்சியை நோக்கமாகக் கொண்ட திட்டங்களை செயல்படுத்த இத்தனை ஆண்டுகள் எந்தக் கட்சிகளும் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை விளக்கினார்.
அதேபோல, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, கோயம்புத்தூரின் வளர்ச்சிக்கான திட்டங்களைச் செயல்படுத்தத் தயாராக இருப்பதையும், அதற்குத் தேவையான தொலை நோக்குப் பார்வை உடையவர்களை, மக்கள் பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுக்க வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துக் கூறினார்.