நீலகிரி தொகுதியை பொறுத்தவரை மோடிஜியா, 2ஜியா என்ற போட்டி நிலவுகிறது - மத்திய அமைச்சர் எல் முருகன் பேட்டி

மேலும், பாஜகவிற்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகி வருவதை, பிரதமரின் ரோடு சோ மற்றும் திருப்பூர், சேலம், நாகர்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற மாநாடுகள் மூலம் அனைவரும் அறிந்துள்ளதாக கூறினார்.


திருப்பூர்: நீலகிரி தொகுதி பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மத்திய இணை அமைச்சர் எல் முருகன், நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட அவினாசியில் இன்று தனது பிரச்சாரத்தை தொடங்கினார். முன்னதாக அவினாசி லிங்கேஸ்வரர் கோவிலில் தரிசனம் மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து, அருகிலுள்ள ரோட்டரி மஹாலில் அவினாசியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்களை சந்தித்து அவர்களின் குறைகள் மற்றும் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசுகையில், மத்திய அரசின் 10 ஆண்டுக்கால சாதனைகளையும் மாநில அரசின் மூன்று ஆண்டுக்கால ஊழல் அவலங்களையும் மக்களிடம் கொண்டு சென்று பிரசாரம் மேற்கொள்ள இருப்பதாகவும், நீலகிரி தொகுதி மக்கள் திமுக வேட்பாளரை கண்டு வெட்கி தலை குனிகிறார்கள். 2 ஜி வழக்கின் குற்றப் பின்னணி உடையவர், சனாதனம் பட்டியலின மக்களின் ஒரு தரப்பினரையும், பெண்கள் என பல தரப்பு மக்களையும் அவதூறாகப் பேசும் வேட்பாளரை பெற்றதால் அவர்கள் வெட்கி தலை குனிகிறார்கள் என்றார்.

மேலும், பாஜகவிற்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகி வருவதை பிரதமரின் ரோடு சோ மற்றும் திருப்பூர் சேலம் நாகர்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற மாநாடுகள் மூலம் அனைவரும் அறிந்துள்ளார்கள். நீலகிரி தொகுதி திமுக வேட்பாளர் ஆ.ராசாவின் 2ஜி வழக்கை மீண்டும் சிபிஐ விசாரிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கி இருப்பது அவர்களுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது எனவும் பேட்டி அளித்தார். மேலும், நீலகிரி தொகுதியை பொருத்தவரை மோடி ஜி ஆயா 2 ஜியா என்ற போட்டி தான் நிலவுவதாகவும் தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...