கோவையில் தேர்தல் விழிப்புணர்வு வாகனத்தை ஆட்சியர் துவக்கி வைத்தார்

வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்தும், தேர்தலில் நேர்மையாக வாக்களிப்பது குறித்தும், கோவை மாவட்ட பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடமாடும் தேர்தல் விழிப்புணர்வு வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டது.


கோவை: வரும் 19ஆம் தேதிதமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல்நடைபெற உள்ள நிலையில், 100% வாக்குப் பதிவினை உறுதி செய்யும் வண்ணம் பல்வேறு விதமாக விழிப்புணர்வு நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, கோவை மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்குப் பதிவினை உறுதி செய்யும் விதமாக நடமாடும் தேர்தல் விழிப்புணர்வு வாகனத்தை, கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் இன்று (மார்ச்.25) துவக்கி வைத்தார்.



செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நடமாடும் வாகனத்தின் மூலம் வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்தும், தேர்தலில் நேர்மையாக வாக்களிப்பது குறித்தும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காணொளிகள் ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது. 

இந்த விழிப்புணர்வு வாகனமானது நகரப் பகுதி மட்டுமின்றி மாவட்டத்தில் உள்ள ஊரகப் பகுதிகளின் முக்கிய இடங்களுக்கும் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்த பயன்படுத்தப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...