வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்தும், தேர்தலில் நேர்மையாக வாக்களிப்பது குறித்தும், கோவை மாவட்ட பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடமாடும் தேர்தல் விழிப்புணர்வு வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டது.
கோவை: வரும் 19ஆம் தேதிதமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல்நடைபெற உள்ள நிலையில், 100% வாக்குப் பதிவினை உறுதி செய்யும் வண்ணம் பல்வேறு விதமாக விழிப்புணர்வு நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, கோவை மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்குப் பதிவினை உறுதி செய்யும் விதமாக நடமாடும் தேர்தல் விழிப்புணர்வு வாகனத்தை, கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் இன்று (மார்ச்.25) துவக்கி வைத்தார்.

செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நடமாடும் வாகனத்தின் மூலம் வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்தும், தேர்தலில் நேர்மையாக வாக்களிப்பது குறித்தும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காணொளிகள் ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது.
இந்த விழிப்புணர்வு வாகனமானது நகரப் பகுதி மட்டுமின்றி மாவட்டத்தில் உள்ள ஊரகப் பகுதிகளின் முக்கிய இடங்களுக்கும் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்த பயன்படுத்தப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதன்படி, கோவை மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்குப் பதிவினை உறுதி செய்யும் விதமாக நடமாடும் தேர்தல் விழிப்புணர்வு வாகனத்தை, கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் இன்று (மார்ச்.25) துவக்கி வைத்தார்.
செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நடமாடும் வாகனத்தின் மூலம் வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்தும், தேர்தலில் நேர்மையாக வாக்களிப்பது குறித்தும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காணொளிகள் ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது.
இந்த விழிப்புணர்வு வாகனமானது நகரப் பகுதி மட்டுமின்றி மாவட்டத்தில் உள்ள ஊரகப் பகுதிகளின் முக்கிய இடங்களுக்கும் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்த பயன்படுத்தப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.