ரேஷன் கடைகளில் மானிய விலையில் தேங்காய் எண்ணெய் - பொள்ளாச்சி தொகுதி திமுக வேட்பாளர்

மேலும், பொள்ளாச்சி ரயில் நிலையத்தை மதுரை அல்லது சேலம் கோட்டத்துடன் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேட்பு மனு தாக்கலுக்குப் பின்பு திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமி பேட்டி.


கோவை: பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதி தி.மு.க. வேட்பாளராக ஈஸ்வரசாமி போட்டியிடுகிறார்.



இவர் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி கேத்தரின் சரண்யாவிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.



இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வேட்பாளர் ஈஸ்வரசாமி,

தென்னை விவசாயிகளின் அடிப்படை கொப்பரை விலை கிடைக்கவும், ரேஷனில் தேங்காய் எண்ணெய் மானிய விலையில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், இளைஞர்களுக்கு தென்னை நார் மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக மாற்று பயிற்சி மையம் அமைக்கப்படும் என்றார்.

மேலும், பொள்ளாச்சி ரயில் நிலையத்தை மதுரை அல்லது சேலம் கோட்டத்துடன் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும், இந்து சமய அறநிலையத்துறை மூலமாக ஆனைமலையில் தொழில் பயிற்சி கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும், கோவை, திருப்பூர், கரூர், ஈரோடு மக்களின் குடிநீர் தேவைக்கு ஆனைமலை நல்லாறு திட்டம் நிறைவேற்றப்பட நடவடிக்கை எடுக்கப்படும், தென்னை பயிற்சி மையம் ஆராய்ச்சி நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் தேர்தல் வாக்குறுதி அளித்தார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...