வரும் 13 ஆம் தேதி கோவையில் நடைபெறவுள்ள திமுக பிரச்சார கூட்டம், எல் அண்ட் டி புறவழிச்சாலையில் நடைபெறவுள்ள நிலையில், இடத்தினை, தமிழக வீட்டுவசதி வாரியம் மற்றும் மதுவிலக்குத்துறை அமைச்சர் சு.முத்துச்சாமி இன்று நேரில் ஆய்வு செய்தார்.
கோவை: நாடாளுமன்ற தேர்தலில் போட்டியின் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, தமிழக முதல்வர் மற்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்று பயணத்தில் ஈடுபட்டுள்ளார்.
அதன் ஒரு பகுதியாக, வரும் 13 ஆம் தேதி கோவைக்கு வருகை தரும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், இந்தியா கூட்டணியின் கோவை திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார், பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமி ஆகியோருக்கு வாக்கு சேகரிக்க உள்ளார்.
அதற்காக, கோவை எல் அண்ட் டி புறவழிச்சாலையில் இடம் தேர்வு செய்யப்பட உள்ளது. கூட்டம் நடைபெறும் இடத்தினை, தமிழக வீட்டுவசதி வாரியம் மற்றும் மதுவிலக்குத்துறை அமைச்சர் சு.முத்துச்சாமி இன்று நேரில் ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது, கோவை திமுக தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன், வடக்கு மாவட்ட செயலாளர் தொ.அ.ரவி, கழக சொத்துப் பாதுகாப்பு குழு துணைத்தலைவர் பொங்கலூர் பழனிச்சாமி, மாணவர் அணி மாநில தலைவர் வழக்கறிஞர் ராஜீவ்காந்தி, தலைமை செயற்குழு உறுப்பினர் ஏர்போர்ட் ராஜேந்திரன், தளபதி தியாகு, வடக்கு மாவட்ட துணைச்செயலாளர் அசோக் ஆறுக்குட்டி, பட்டணம் செல்வகுமார், மதுரை பாலா உள்ளிட்ட பலர் இருந்தனர்.
அதன் ஒரு பகுதியாக, வரும் 13 ஆம் தேதி கோவைக்கு வருகை தரும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், இந்தியா கூட்டணியின் கோவை திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார், பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமி ஆகியோருக்கு வாக்கு சேகரிக்க உள்ளார்.
அதற்காக, கோவை எல் அண்ட் டி புறவழிச்சாலையில் இடம் தேர்வு செய்யப்பட உள்ளது. கூட்டம் நடைபெறும் இடத்தினை, தமிழக வீட்டுவசதி வாரியம் மற்றும் மதுவிலக்குத்துறை அமைச்சர் சு.முத்துச்சாமி இன்று நேரில் ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது, கோவை திமுக தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன், வடக்கு மாவட்ட செயலாளர் தொ.அ.ரவி, கழக சொத்துப் பாதுகாப்பு குழு துணைத்தலைவர் பொங்கலூர் பழனிச்சாமி, மாணவர் அணி மாநில தலைவர் வழக்கறிஞர் ராஜீவ்காந்தி, தலைமை செயற்குழு உறுப்பினர் ஏர்போர்ட் ராஜேந்திரன், தளபதி தியாகு, வடக்கு மாவட்ட துணைச்செயலாளர் அசோக் ஆறுக்குட்டி, பட்டணம் செல்வகுமார், மதுரை பாலா உள்ளிட்ட பலர் இருந்தனர்.