கோவையில் 'ஒம் முருகா' என்று பாடிக்கொண்டு வேட்புமனு தாக்கல் செய்ய வந்த முதியவர்..!

கோவை செல்வபுரத்தை சேர்ந்த துரைசாமி என்ற சுயேட்சை வேட்பாளர், 'ஓம் முருகா' என்று கடவுள் பாடல்களை பாடிக் கொண்டு, நடனமாடியபடி கோவை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார்.



கோவை: கோவை செல்வபுரத்தை சேர்ந்த துரைசாமி என்ற சுயேட்சை வேட்பாளர், நடனமாடிக் கொண்டும், 'ஓம் முருகா', என்று பாடிக் கொண்டும் வேட்புமனு தாக்கல் செய்ய ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்திருந்தது, பொது மக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது. 

நாளையுடன் (மார்ச் 27) வேட்பு மனு தாக்கல் முடிவடையும் நிலையில், இன்று பல்வேறு கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த வண்ணம் உள்ளனர். 

இதில் குறிப்பாக சுயேச்சை வேட்பாளர்கள் அவரவர் பாணியில் நூதன முறையில் வேடபு மனு செய்யும்செய்து வருகின்றனர்.



இன்று காலை தேர்தல் மன்னன் என்று அனைவராலும் அழைக்கப்படும், நூர் முகமது என்பவர் கையில் திருவோடு ஏந்தியபடி மிளகாய் மாலை அணிந்து நூதன முறையில் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



இவரையடுத்து, கோவை செல்வபுரத்தை சேர்ந்த சுயேட்சை வேட்பாளரான துரைசாமி என்பவர் முருகர் பாடல்களை பாடிக்கொண்டு நடனம் ஆடியபடி வந்து, கோவை மாவட்ட தேர்தல் அலுவலர் கிராந்தி குமார் பாடியிடம், கோவை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார்.

பின்னர் பேசிய அவர், சிறு வயது முதலே நாட்டு மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி இருந்து வருவதால் எம்.பியாக மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதற்காக கோவை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளேன், என்றார். 

மேலும், விவசாயம் சார்ந்த தொழில்களுக்கு சேவை செய்வதை இலக்காக வைத்துள்ளதாக தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...

வெள்ளியங்கிரி மலை ஏற நாளை முதல் தடை

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை காரணமாக, கோவை வெள்ளியங்கிரி மலைக்கு மே 13 முதல் பக்தர்கள் செல்ல வனத்துறை தற்காலிக தடை...

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...