கோவையில் 'ஒம் முருகா' என்று பாடிக்கொண்டு வேட்புமனு தாக்கல் செய்ய வந்த முதியவர்..!

கோவை செல்வபுரத்தை சேர்ந்த துரைசாமி என்ற சுயேட்சை வேட்பாளர், 'ஓம் முருகா' என்று கடவுள் பாடல்களை பாடிக் கொண்டு, நடனமாடியபடி கோவை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார்.



கோவை: கோவை செல்வபுரத்தை சேர்ந்த துரைசாமி என்ற சுயேட்சை வேட்பாளர், நடனமாடிக் கொண்டும், 'ஓம் முருகா', என்று பாடிக் கொண்டும் வேட்புமனு தாக்கல் செய்ய ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்திருந்தது, பொது மக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது. 

நாளையுடன் (மார்ச் 27) வேட்பு மனு தாக்கல் முடிவடையும் நிலையில், இன்று பல்வேறு கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த வண்ணம் உள்ளனர். 

இதில் குறிப்பாக சுயேச்சை வேட்பாளர்கள் அவரவர் பாணியில் நூதன முறையில் வேடபு மனு செய்யும்செய்து வருகின்றனர்.



இன்று காலை தேர்தல் மன்னன் என்று அனைவராலும் அழைக்கப்படும், நூர் முகமது என்பவர் கையில் திருவோடு ஏந்தியபடி மிளகாய் மாலை அணிந்து நூதன முறையில் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



இவரையடுத்து, கோவை செல்வபுரத்தை சேர்ந்த சுயேட்சை வேட்பாளரான துரைசாமி என்பவர் முருகர் பாடல்களை பாடிக்கொண்டு நடனம் ஆடியபடி வந்து, கோவை மாவட்ட தேர்தல் அலுவலர் கிராந்தி குமார் பாடியிடம், கோவை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார்.

பின்னர் பேசிய அவர், சிறு வயது முதலே நாட்டு மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி இருந்து வருவதால் எம்.பியாக மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதற்காக கோவை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளேன், என்றார். 

மேலும், விவசாயம் சார்ந்த தொழில்களுக்கு சேவை செய்வதை இலக்காக வைத்துள்ளதாக தெரிவித்தார்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...