கோவையில் 'ஒம் முருகா' என்று பாடிக்கொண்டு வேட்புமனு தாக்கல் செய்ய வந்த முதியவர்..!

கோவை செல்வபுரத்தை சேர்ந்த துரைசாமி என்ற சுயேட்சை வேட்பாளர், 'ஓம் முருகா' என்று கடவுள் பாடல்களை பாடிக் கொண்டு, நடனமாடியபடி கோவை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார்.



கோவை: கோவை செல்வபுரத்தை சேர்ந்த துரைசாமி என்ற சுயேட்சை வேட்பாளர், நடனமாடிக் கொண்டும், 'ஓம் முருகா', என்று பாடிக் கொண்டும் வேட்புமனு தாக்கல் செய்ய ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்திருந்தது, பொது மக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது. 

நாளையுடன் (மார்ச் 27) வேட்பு மனு தாக்கல் முடிவடையும் நிலையில், இன்று பல்வேறு கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த வண்ணம் உள்ளனர். 

இதில் குறிப்பாக சுயேச்சை வேட்பாளர்கள் அவரவர் பாணியில் நூதன முறையில் வேடபு மனு செய்யும்செய்து வருகின்றனர்.



இன்று காலை தேர்தல் மன்னன் என்று அனைவராலும் அழைக்கப்படும், நூர் முகமது என்பவர் கையில் திருவோடு ஏந்தியபடி மிளகாய் மாலை அணிந்து நூதன முறையில் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



இவரையடுத்து, கோவை செல்வபுரத்தை சேர்ந்த சுயேட்சை வேட்பாளரான துரைசாமி என்பவர் முருகர் பாடல்களை பாடிக்கொண்டு நடனம் ஆடியபடி வந்து, கோவை மாவட்ட தேர்தல் அலுவலர் கிராந்தி குமார் பாடியிடம், கோவை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார்.

பின்னர் பேசிய அவர், சிறு வயது முதலே நாட்டு மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி இருந்து வருவதால் எம்.பியாக மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதற்காக கோவை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளேன், என்றார். 

மேலும், விவசாயம் சார்ந்த தொழில்களுக்கு சேவை செய்வதை இலக்காக வைத்துள்ளதாக தெரிவித்தார்.

Newsletter

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர்-சென்னை சிறப்பு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிப்பு

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர் மற்றும் சென்னை இடையே இயக்கப்படும் சிறப்பு விரைவு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிக்கப்பட்டுள...

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...