தாராபுரத்தில் ஈரோடு நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் அறிமுகக் கூட்டம்

அரசு வேலையாக இருந்தாலும் சரி, தனியார் வேலையாக இருந்தாலும் சரி அதிமுக தொண்டனுக்கு தான் முதல் முன்னுரிமை தரப்படும் என ஈரோடு நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் தெரிவித்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக ஈரோடு நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, செங்கோட்டையன், பொள்ளாச்சி ஜெயராமன், ராமசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில், ஈரோடு நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் பேசுகையில் அதிமுக தொண்டர்கள் நாம் வீடு வீடாக சென்று பணியாற்றிட வேண்டும். பழையபடி வீதியில் கொடியை கொண்டு சென்றால் எந்த காரியமும் நடக்காது. இந்த காரியத்தை செய்தால் மட்டுமே எடப்பாடியாருக்கு மகத்தான வெற்றி கிடைக்கும். தமிழக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடியார் கூறியுள்ளார்.



அரசு வேலையாக இருந்தாலும் சரி தனியார் வேலையாக இருந்தாலும் சரி அதிமுக தொண்டனுக்கு தான் முதல் முன்னுரிமை தரப்படும் என தெரிவித்தார். என்னுடைய தனிப்பட்ட சக்தியிலும் உங்களுக்கு என்ன செய்ய முடியுமோ உங்களுடைய தனிப்பட்ட பிரச்சினையாக இருந்தாலும் சரி, குடும்ப பிரச்சினையாக இருந்தாலும் சரி, உங்கள் கிராமத்தில் ஒரு நலத்திட்டமாக இருந்தாலும் சரி அனைத்து பிரச்சினைகளையும் நிறைவேற்றிக் கொடுப்பது எனது கடமை.



அந்தப் பணியை முழு நேர பணியாக ஏற்றுக் கொள்கிறேன். மக்கள் சேவையை நோக்கி கடந்த மூன்று ஆண்டுகளாக சென்று கொண்டுள்ளேன். இந்த மக்கள் சேவை யாருக்கு என்றால் உங்களுக்குத்தான் முன்னுரிமை. ஒவ்வொரு தொண்டனுக்கும் தான் அதிமுக தொண்டர்கள் முழு பலத்துடன் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்ய வைத்தீர்கள் என்றால் நமது எடப்பாடியாருடன் சேர்ந்து என்னால் எவ்வளவு செய்ய முடியுமோ அவ்வளவும் செய்வேன் என்று தெரிவித்தார். ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் உள்ள அனைத்து அதிமுக தொண்டர்களுக்கும் முதலில் அனைத்து சலுகைகளும் தொண்டனுக்கு அதன் பிறகு தான் பொதுமக்களுக்கு என்று தெரிவித்தார்.

Newsletter

கோவை கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் 23-06-2026 அன்று கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றத...

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...