தாராபுரத்தில் ஈரோடு நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் அறிமுகக் கூட்டம்

அரசு வேலையாக இருந்தாலும் சரி, தனியார் வேலையாக இருந்தாலும் சரி அதிமுக தொண்டனுக்கு தான் முதல் முன்னுரிமை தரப்படும் என ஈரோடு நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் தெரிவித்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக ஈரோடு நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, செங்கோட்டையன், பொள்ளாச்சி ஜெயராமன், ராமசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில், ஈரோடு நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் பேசுகையில் அதிமுக தொண்டர்கள் நாம் வீடு வீடாக சென்று பணியாற்றிட வேண்டும். பழையபடி வீதியில் கொடியை கொண்டு சென்றால் எந்த காரியமும் நடக்காது. இந்த காரியத்தை செய்தால் மட்டுமே எடப்பாடியாருக்கு மகத்தான வெற்றி கிடைக்கும். தமிழக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடியார் கூறியுள்ளார்.



அரசு வேலையாக இருந்தாலும் சரி தனியார் வேலையாக இருந்தாலும் சரி அதிமுக தொண்டனுக்கு தான் முதல் முன்னுரிமை தரப்படும் என தெரிவித்தார். என்னுடைய தனிப்பட்ட சக்தியிலும் உங்களுக்கு என்ன செய்ய முடியுமோ உங்களுடைய தனிப்பட்ட பிரச்சினையாக இருந்தாலும் சரி, குடும்ப பிரச்சினையாக இருந்தாலும் சரி, உங்கள் கிராமத்தில் ஒரு நலத்திட்டமாக இருந்தாலும் சரி அனைத்து பிரச்சினைகளையும் நிறைவேற்றிக் கொடுப்பது எனது கடமை.



அந்தப் பணியை முழு நேர பணியாக ஏற்றுக் கொள்கிறேன். மக்கள் சேவையை நோக்கி கடந்த மூன்று ஆண்டுகளாக சென்று கொண்டுள்ளேன். இந்த மக்கள் சேவை யாருக்கு என்றால் உங்களுக்குத்தான் முன்னுரிமை. ஒவ்வொரு தொண்டனுக்கும் தான் அதிமுக தொண்டர்கள் முழு பலத்துடன் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்ய வைத்தீர்கள் என்றால் நமது எடப்பாடியாருடன் சேர்ந்து என்னால் எவ்வளவு செய்ய முடியுமோ அவ்வளவும் செய்வேன் என்று தெரிவித்தார். ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் உள்ள அனைத்து அதிமுக தொண்டர்களுக்கும் முதலில் அனைத்து சலுகைகளும் தொண்டனுக்கு அதன் பிறகு தான் பொதுமக்களுக்கு என்று தெரிவித்தார்.

Newsletter

சென்னை - கோவை இடையே மே 31 வரை கோடைகால சிறப்பு ரயில் சேவை; தொழில்துறை வரவேற்பு

கோடை விடுமுறை காலத்தில் சென்னை - கோவை இடையே மே 13 முதல் 31 வரை சிறப்பு ரயில் சேவை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்...

2026 நீட் தேர்வு ரத்து: மே 3ஆம் தேதி நடைபெற்ற NEET தேர்வு செல்லாது! தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகார்கள் மற்றும் தேர்வின் நம்பகத்தன்மை குறித்த சந்தேகங்களைத் தொடர்ந்து, நாடு முழுவதும் கடந்...

உலக செவிலியர் தினம்: திருப்பூரில் விழிப்புணர்வு பேரணி

திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மெழுகுவர்த்தி ஏந்தி செவிலியர்கள் உறுதிமொழி ஏற்று விழிப்புணர்வு பேரணிய...

திருப்பத்தூர் TVK எம்.எல்.ஏ. சீனிவாச செதுபதி நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க Madras High Court தடை

திருப்பத்தூர் தொகுதியில் இரண்டு இடங்களில் ஒரே பெயர் இருப்பதால் DMK முன்னாள் அமைச்சர் K.R. பெரியகருப்பன் தாக்கல் செய்த மன...

வால்பாறையில் பயங்கர விபத்து: கார் மோதி பெண் படுகாயம்

கோவை மாவட்டம் வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய சம்பவம் நடந்துள்ளது. படுகாய...

வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய பதைபதைப்பு சம்பவம்

கோவை மாவட்டம் வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய சம்பவம் நடந்துள்ளது. சிசிடி...