மக்கள் விரோத ஆட்சியை வீட்டிற்கு அனுப்பும் நேரம் வந்துவிட்டது - தாராபுரத்தில் அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் பேச்சு

சுங்கம், குமாரபாளையம், தெக்காலூர், வரப்பாளையம், தேர் பாதை உள்ளிட்ட பகுதிகளில் அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அதிமுக மேற்கு ஒன்றியத்தின் சார்பில் திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளரும், மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினருமான மகேந்திரன் தலைமையில் தீவிரமாக வாக்கு சேகரிக்கும் பணி நடைபெற்றது. அதிமுக மேற்கு ஒன்றிய செயலாளர் பாலகுமாரன் முன்னிலையில் நடைபெற்றது.



சுங்கம், குமாரபாளையம், தெக்காலூர், வரப்பாளையம், தேர் பாதை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிமுக சார்பில் ஈரோடு நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் இரட்டை இலை சின்னத்திற்கு தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.



மேலும் இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சரும், ஈரோடு மாவட்ட அதிமுக செயலாளருமான கே.பி. ராமலிங்கம் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், மக்கள் விரோத ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் நேரம் வந்துவிட்டதாகவும், பொதுமக்கள் ஒரு விரல் புரட்சியில் இரண்டு விரலான இரட்டை இலை சின்னத்திற்கு உங்களது பொன்னான வாக்குகளை செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.



அது மட்டும் இன்றி தமிழ்நாட்டில் போதை பழக்கம் அதிகரித்து விட்டதாகவும், குழந்தைகளுக்கு விற்பனை செய்யப்படும் மிட்டாய்களிலும் போதை பொருள்கள் விற்பனை அதிகரித்துள்ளதாகவும், தமிழகம் போதை மாநிலமாக திகழ்ந்து வருவதாகவும் ஈரோடு நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் தெரிவித்துள்ளார்.

Newsletter

செவித்திறன் குறைபாடுடையோருக்கு வேலைவாய்ப்பு: Lakshmi Ring Travellers நிறுவனத்தின் 'நம்ம லாண்டரி' சேவை

கோவையில் Lakshmi Ring Travellers நிறுவனம், செவித்திறன் மற்றும் பேச்சுத்திறன் குறைபாடுடையோருக்காக 'நம்ம லாண்டரி' என்ற சலவ...

மேட்டுப்பாளையம் தொகுதியில் டி.ஆர்.எஸ் சுயேட்சை வேட்பாளராக களமிறக்கம்

மேட்டுப்பாளையம் தொகுதியில் திமுக போட்டியிட வாய்ப்பு மறுத்ததால், கட்சியை விட்டு வெளியேறிய டி.ஆர். சண்முகசுந்தரம் இன்று சு...

மேட்டுப்பாளையம் தொகுதியில் Kavitha Kalyanasundaram வேட்பு மனு தாக்கல்

கோவை வடக்கு மாவட்டம் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் Kavitha Kalyanasundar...

மேட்டுப்பாளையம் தொகுதி அதிருப்திக்குப் பிறகு ராஜினாமா: திமுக T R சண்முகசுந்தரம் தனியாக போட்டி?

குடும்ப சூழ்நிலை மற்றும் பணி சுமை காரணமாக திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் பதவியிலிருந்தும் கட்சியிலிருந்தும் TR சண்முகச...

கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக வேட்பாளர் கனிமொழி வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கனிமொழி, சனிக்கிழமை கோட்டாட்சியர் வ...

கோவை வடக்கில் போட்டியிடும் வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி பதிவு

பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், கோவை வடக்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்த கட்சித் தலைவர்களுக்கு நன்ற...