காங்கேயத்தில் ஹெல்மெட் அணிந்து வந்தவர்களுக்கு லட்டு வழங்கி போக்குவரத்து காவல்துறை வரவேற்பு

போக்குவரத்து விதிகளை பின்பற்றும் வகையிலும், சாலை விபத்தை தவிர்க்கும் வகையிலும் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்தவர்கள் மற்றும் காரில் சீட் பெல்ட் அணிந்து வந்தவர்கள் ஆகியோருக்கு போக்குவரத்து காவல் ஆய்வாளர் பழனிச்சாமி மற்றும் சமூக ஆர்வலர் சுல்தான்பேட்டை வள்ளி கனகராஜ் ஆகியோர் லட்டுகளை வழங்கினர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் போக்குவரத்து விதிகளை பின்பற்றும் வகையிலும், சாலை விபத்தை தவிர்க்கும் வகையிலும் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்தவர்கள் மற்றும் காரில் சீட் பெல்ட் அணிந்து வந்தவர்கள் ஆகியோருக்கு போக்குவரத்து காவல் ஆய்வாளர் பழனிச்சாமி மற்றும் சமூக ஆர்வலர் சுல்தான்பேட்டை வள்ளி கனகராஜ் ஆகியோர் தலைமையில் லட்டுகளை வழங்கி ஊக்குவித்தனர்.



இதனை தொடர்ந்து போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றாமல் வாகனத்தை ஓட்டி வருபவர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கி விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும், சாலை விபத்துகளை குறைக்க ஒத்துழைக்க வேண்டும் எனவும் காவல் துறை அதிகாரிகள் வாகன ஓட்டிகளுக்கு அறிவுரைகளை வழங்கினர். மேலும் இந்நிகழ்வில் போக்குவரத்து போலிசார்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.



மேலும் நெடுஞ்சாலை மற்றும் சிக்னல்களில் வெயிலில் அயராது பொதுமக்களுக்காக உழைக்கும் சுமார் 10க்கும் மேற்பட்ட போக்குவரத்து காவலர்களுக்கு தாகத்தை குறைக்கும் வகையில் இளநீர் வழங்கப்பட்டு‌ காவலர்களையும் உற்சாகப்படுத்தப்பட்டது. காங்கேயம் ரவுண்டானா, கரூர் சாலை, பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் இது போன்று வாகன ஓட்டிகளுக்கு லட்டுகள் வழங்கப்பட்டது.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...