தாராபுரம் இனாம் நிலங்களை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு - பெல்லம்பட்டி கிராமத்தில் விவசாயிகள் போராட்டம்

பெல்லம்பட்டி, சடையபாளையம், மரப்பாளையம் மருதூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் வீடுகள், தோட்டங்கள், வாகனங்கள் ஆகியவற்றில் கருப்புக்கொடி கட்டி 3000க்கும் மேற்பட்ட மக்கள் தேர்தலைப் புறக்கணிக்க போவதாக தெரிவித்துள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் இனாம் நிலங்களை கையகப்படுத்துவதைக் கண்டித்து, இனாம் நில விவசாயிகள், குத்தகையாளர்கள், வீடு, மனை உரிமையாளர்கள் இயக்கம், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் பெல்லம்பட்டி,கிராமத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது: தமிழகம் முழுவதும் இனாம் நிலங்களை, இந்து சமய அறநிலையத் துறையும், வக்பு வாரியமும் 12 லட்சம் ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்களை, சட்டவிரோதமாக அபகரிக்கும் பணிகளை செய்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து குண்டடம் ஒன்றியம் பெல்லம்பட்டி, சடைய பாளையம், மரப்பாளையம் மருதூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் வீடுகள், தோட்டங்கள், வாகனங்கள் ஆகியவற்றில் கருப்புக்கொடி கட்டி 3000க்கும் மேற்பட்ட மக்கள் தேர்தலைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள், தமிழக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து பெண் விவசாயிகள் மண்ணை வாரி தூவி போராட்டத்தில் ஈடுபட்டனர்.



பல்வேறு பத்திரங்களின் மூலம் நில உரிமை பெற்ற மக்களை ஆக்கிரமிப்பாளர்கள் என்று சொல்லி அழைப்பாணை அனுப்பி, ஆஜர் ஆணை போக்கு செயல்படுத்தப்படுகிறது. மேலும் வழக்கை விசாரிக்கும்போது ஆவணங்களைக் கொடுக்காமலும், பதில் மனு தாக்கல் செய்வதற்கு கால அவகாசம் கொடுக்காமலும், சட்டவிரோதமாக வீடு, மனை உரிமையாளர்களை வெளியேற்றும் நடவடிக்கையை இந்து சமய அறநிலை துறை செய்து வருகிறது.



இதனை உடனே திரும்ப பெற வேண்டும் என தமிழக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். இதனால் சடைய படையை ஊராட்சிக்கு உட்பட்ட 3000த்திற்கும் மேற்பட்ட மக்கள் வரும் 19ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க போவதில்லை என தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...