திமுகவை சேர்ந்த பெண்களுக்கு தான் ஆயிரம் ரூபாய் செல்கிறது - திருப்பூரில் ஜி.கே.வாசன் பேச்சு

திருப்பூரில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மக்களுடைய பிரச்சினைகளை இதுவரை சரியாக பிரதிபலிக்கவில்லை என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் குற்றம்சாட்டியுள்ளார்.


திருப்பூர்: திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளராக போட்டியிடும் முருகானந்தனை ஆதரித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் திருப்பூரில் புதிய பேருந்து நிலையம் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது பேசியவர், தொழிலாளர்கள் மற்றும் தொழில்துறையினர் நிறைந்த திருப்பூரில் ஏராளமான பிரச்சனைகள் உள்ளது. திருப்பூரில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மக்களுடைய பிரச்சினைகளை இதுவரை சரியாக பிரதிபலிக்கவில்லை. மக்களை சந்திக்கவே இல்லை. எனவே நல்லவர்களை அடையாளம் கண்டு வாக்களிப்பதோடு அவர்களை பயன்படுத்திக் கொள்ளுங்கள். பத்து வருட கால பிரதமர் மோடியின் ஆட்சியில் மக்களின் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளார்.

பிரதமரின் இந்த சாதனைகளே வருங்கால பாராளுமன்றத் தேர்தலின் வெற்றிக்கு அடித்தளம். 100% திட்டங்களை திருப்பூர் போன்ற தொழில் நகரங்களுக்கு கொண்டு வந்து திருப்பூர் தொகுதியை நம்பர் ஒன் தொகுதியாக மாற்றுவதற்கு பாரதிய ஜனதா கட்சி வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் என்றும். மக்கள் விரோத திமுக அரசின் பொய் பிரச்சாரத்தை மக்கள் யாரும் நம்ப வேண்டாம்.தொடர்ந்து பொய் பிரச்சாரங்களை கூறிக்கொண்டு மக்களை அலைக்கழித்து கொண்டிருக்கிறார்கள்.

எனவே இந்த தேர்தலில் உங்கள் வாக்கின் மூலம் உங்களை ஏமாற்றியவர்களை ஏமாளியாக வேண்டும் என்றும் கூறியவர். மத்திய அரசின் மகளிர் திட்டங்களை நரேந்திர மோடி அரசில் மட்டும்தான் இந்தியாவில் உள்ள பெண்களுக்கு அதிக திட்டங்களை கொடுத்திருப்பதாகவும் தெரிவித்தார். திமுக அரசை பொறுத்தவரை திமுகவை சேர்ந்த பெண்களுக்கு தான் ஆயிரம் ரூபாய் செல்வதாக குற்றம்சாட்டினார்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...