எம்ஜிஆர், ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்கள் முடக்கம் - தாராபுரத்தில் அதிமுக வேட்பாளர் புகார்

மாணவர்களுக்கு இலவச மடிக்க கணினி, தாலிக்கு தங்கம், இலவச ஸ்கூட்டி திட்டம் மற்றும் திருமண உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தி வந்தது என்று அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் பேசினார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சிக்கு உட்பட்ட காமராஜபுரம் பூளவாடி பிரிவு அரசமரம் டி எஸ் கார்னர் மற்றும் புது பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று அதிமுக ஈரோடு நாடாளுமன்ற வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் திறந்த வெளி வாகனத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது தாராபுரம் அதிமுக நகர செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது.



ஈரோடு நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் கூறுகையில், எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா கொண்டு வந்த அனைத்து திட்டங்களையும் திமுக அரசு முடக்கிவிட்டது.

இதில் மாணவர்களுக்கு இலவச மடிக்க கணினி, தாலிக்கு தங்கம், இலவச ஸ்கூட்டி திட்டம் மற்றும் திருமண உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தி வந்தது. திமுக அரசு ஏற்றவுடன் மூன்று வருடங்களில் அனைத்து திட்டங்களையும் முடக்கிவிட்டது. ஆனால் தற்போது பள்ளி மாணவர்களை சீரழிக்கும் வகையில் மாணவர்களுக்கு தேவையான மிட்டாய்களில் போதை பொருள்களை கலந்து விற்பனை செய்து வருகின்றனர். அதேபோல் பள்ளி குழந்தைகளின் எதிர்காலத்தை சீரழித்து பணம் சம்பாதிக்க வேண்டுமா என கூறினார். இதை தொடர்ந்து திமுக நிர்வாகி கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தது வெட்ட வெளிச்சமாக தெரிந்துள்ளது.



மேலும் லாட்டரி சீட்டுகள் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தடை விதித்தார். ஆனால் திமுக அரசு செயல்படுத்தி வருகிறது. 650 கோடியை லாட்டரி நிறுவன அதிபர் கட்சி நிதியாக வழங்கியுள்ளார். இந்த பணம் யாருடையது அனைத்துமே உங்களுடையது. நீங்கள் வாங்கும் ஐந்து ரூபாய், பத்து ரூபாய் லாட்டரி சீட்டுகள் அனைத்தும் லாட்டரி சீட்டு நிறுவனத்திற்கு சென்று சேர்கிறது. ஆனால் எதுவும் விழுகாது என்று பேசினார்.

Newsletter

கோவையில் ஏர் இந்தியா நிறுவனத்தின் விமான சேவைகளை அதிகரிக்க தொழில்துறையினர் வலியுறுத்தல்

கோவையில் ஏர் இந்தியா விமான சேவைகளை அதிகரிக்க கொங்கு குளோபல் போரம் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது டெல்லி மற்...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 31 நிலவரம்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் மழை நீர் வரத்தால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. திருப்ப...

பார்க் தொழில்நுட்பக் கல்லூரியில் உலக தண்ணீர் தினமும் வனங்கள் தினமும் சிறப்பாக கொண்டாடப்பட்டன

கோவை கருமத்தம்பட்டியில் உள்ள பார்க் தொழில்நுட்பக் கல்லூரியில் உலக தண்ணீர் தினம் மற்றும் உலக வனங்கள் தினம் 28 மார்ச் 2026...

கற்பகம் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் 17வது ஆண்டு விளையாட்டு தினம் சிறப்பாக நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் 28 மார்ச் 2026 அன்று 17வது ஆண்டு விளையாட்டு தினத்தை கொண்டாடியது. நிறு...

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...