பாஜகவின் பத்தாண்டு கால ஆட்சியின் சாதனைகள் வெற்றியை உறுதி செய்யும் -காங்கேயத்தில் ஜி.கே.வாசன் பிரச்சாரம்

தமிழகத்திலே தேசிய ஜனநாயக கூட்டணி இன்றைக்கு மக்கள் மனதிலே முதல் அணியாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. அனைத்து தொகுதிகளிலும் எங்களுடைய வெற்றி வாய்ப்பு மிகப் பிரகாசமாக இருக்கிறது என்று ஜி.கே.வாசன் பேசியுள்ளார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் ரவுண்டானா அருகே தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் விஜயகுமார் ஆதரித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் ஜி.கே. வாசன் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். தாமாக பொதுச்செயலாளரும், முன்னாள் காங்கேயம் சட்டமன்ற உறுப்பினருமான விடியல் சேகர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கார்வேந்தன், மாவட்டத் தலைவர் ஓகே சண்முகம், மாவட்டத் தலைவர் வி.பி. சண்முகம், பாஜக மாநில மகளிர் அணி செயலாளர் மோகனா சரவணன், வட்டாரத்தலைவர் தனபால் சாமி, மாவட்ட துணை தலைவர் கோபாலகிருஷ்ணன், தமாகா நிர்வாகி அருண் பிரதீப் ஆகியோர் கலந்து கொண்டனர்.

திமுகவிற்கு எதிர்மறை வாக்கு அதிகரித்துக் கொண்டு போகின்றது. அதனுடைய தாக்கம் தேசிய ஜனநாயக கூட்டணி என மக்கள் முடிவெடுத்து இருக்கின்றார்கள். குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பத்தாண்டு கால ஆட்சியினுடைய சாதனைகள் மக்கள் திட்டங்களே எங்களுடைய வெற்றியை உறுதி செய்யும் என்று நம்புகின்றோம். ஈரோடு போன்ற மிக முக்கியமான தொகுதியிலே பல பிரச்சனைகள் நிலுவையிலே இருக்கின்றது. அந்தப் பிரச்சினைகளை எல்லாம் எங்களுடைய வெற்றி வேட்பாளர் மக்களை நேரடியாக சந்தித்து மத்திய அரசுடைய உதவியோடு 100% மக்கள் பணியாற்றக்கூடிய நிலையில் உறுதியாக ஏற்படுத்துவார் என்று வாக்காளர்கள் நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார்கள்.



தமிழகத்திலே தேசிய ஜனநாயக கூட்டணி இன்றைக்கு மக்கள் மனதிலே முதல் அணியாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. எனவே அனைத்து தொகுதிகளிலும் எங்களுடைய வெற்றி வாய்ப்பு மிகப் பிரகாசமாக இருக்கிறது. 55 வருடங்களுக்கு பிறகு தமிழகத்திலே ஒரு நல்லாட்சி அமைய இந்த பாராளுமன்றத் தேர்தலில் வாக்காளர்கள் அடித்தளம் ஏற்படுத்துவார்கள் என்று நம்பிக்கையோடு நாங்கள் மக்களை சந்தித்துக் கொண்டிருக்கின்றோம் என ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

Newsletter

பிரதமர் மோடி கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரளா புறப்பட்டார்

பிரதமர் Narendra Modi கேரளாவில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கோவை விமான நிலையம் வந்தடைந்தார். BJP மாநில தலைவர் Nayinar Nag...

கோவையில் குறுத்தோலை ஞாயிறு விழா: கிறிஸ்தவர்கள் பக்திப் பரவசத்துடன் புனிதப் பேரணி

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள தூய மைக்கல் ஆதித்தூதர் பேராலயத்தில் குறுத்தோலை ஞாயிறு விழா கொண்டாடப்பட்டது. திரளான இறைமக்க...

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...