வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவிற்கு வாக்களிக்க குருமலை மற்றும் ஈசல்திட்டு மலைவாழ் முடிவு

குருமலை, ஈசல்திட்டு போன்ற பகுதிகளில் சாலை அமைப்பதற்காக டெல்லியில் இருந்து பாஜக சார்பில் உத்தரவு தற்போது வாங்கி கொடுத்த நிலையில் வருகின்ற பொள்ளாச்சி பாராளுமன்றத் தேர்தலில் மலைவாழ் மக்கள் பாஜகவுக்கு வாக்களிக்கு போவதாக தெரிவித்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள ஆனைமலை புலிகள் காப்பகம் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகத்தில் குரு மலை, குழிப்பாட்டி, ஈசல்திட்டு, கோடந்தூர், ஆட்டு மலை உட்பட பத்துக்கு மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன. மலை கிராமங்களில் இருந்து அவசர தேவைகளுக்கு அரசு மருத்துவமனைக்கு செல்வதற்கு குருமலையில் இருந்து காடம்பாறை, அட்டகட்டி வழியாக சுமார் 60 கிலோ மீட்டர் தூரம் வர வேண்டிய நிலை உள்ளது.



மேலும் குருமலையில் இருந்து 5 கிலோ மீட்டருக்கு மலைப்பகுதியில் சாலை அமைத்தால் விரைவாக உடுமலை அரசு மருத்துவமனையை அடையலாம். சாலை வசதி இல்லாத காரணத்தால் மழை கிராமங்களில் இருந்து உடல்நலம் மற்றும் கர்ப்பிணி பெண்களை அரசு மருத்துவமனைக்கு கிராம மக்கள் தற்பொழுது வரை தொட்டில் கட்டி தூக்கி வருகின்றனர். இதனால் ஒரு சில நேரங்களில் உயிரிழப்புகளும் ஏற்படுவதுண்டு.

இதற்கிடையில் கடந்த 40 ஆண்டு காலமாகவே அதிமுக, திமுக அரசியல் கட்சியினர் தேர்தலுக்கு மட்டும் மலை கிராம பகுதிகளுக்கு வருகை புரிந்து அடிப்படை வசதிகள் மற்றும் சாலை வசதிகள் செய்து தரப்படும் என வாக்குறுதி அளிக்கிறார்கள். ஆனால் வாக்குறுதி எதுவும் நிறைவேற்றி தருவதில்லை.

இந்த நிலையில் பாஜக சார்பில் குருமலை, ஈசல்திட்டு போன்ற பகுதிகளில் சாலை அமைப்பதற்காக டெல்லியில் இருந்து உத்தரவு தற்போது வாங்கி கொடுத்த நிலையில் வருகின்ற பொள்ளாச்சி பாராளுமன்றத் தேர்தலில் மலைவாழ் மக்கள் பாஜகவுக்கு வாக்களிக்கு போவதாக தெரிவித்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...