கோவில்பாளையம் அக்ரஹார சாமக்குளத்திற்கு மேலும் 2 புதிய நீர்வழிப்பாதைகள் கண்டுபிடிப்பு

மழைநீர் வரும் பாதைகளில் இயந்திரங்களைக் கொண்டு குப்பை, மண்மேடு, புதர்கள் ஆகியவற்றை தன்னார்வலர்கள் அகற்றினர். இதனால் தற்போது அக்ரஹார சாமக்குளத்திற்கு 7 நீர்வழிப்பாதைகள் உள்ளன.


கோவை: கோவை, கோவில்பாளையம் அருகே 165 ஏக்கர் பரப்பளவு கொண்ட அக்ரஹார சாமக்குளம் ஏரி, கவுசிகா நீர்க் கரங்கள் அமைப்பு சார்பில் புனரமைப்பு செய்யப்பட்டு வருகிறது. ஏற்கனவே இருந்த 5 நீர் வழிப்பாதைகள் வழியாக ஏரிக்கு மழை நீர் வரும் நிலையில், மேலும் 2 நீர் வழிப்பாதைகள் இருப்பது ஆய்வில் தெரிந்தது.

இதனையடுத்து இன்று ஏப்ரல்.16 அப்பாதைகளில் இயந்திரங்களைக் கொண்டு குப்பை, மண்மேடு, புதர்கள் ஆகியவற்றை தன்னார்வலர்கள் அகற்றினர். இதனால் தற்போது அக்ரஹார சாமக்குளத்திற்கு 7 நீர்வழிப்பாதைகள் உள்ளன.

இதனால் இனி வரும் காலங்களில் இக்குளத்திற்கு எளிதில் நீர் நிரம்ப வாய்ப்புள்ளதால், அப்பகுதி பொதுமக்கள், விவசாயிகள், தன்னார்வலர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.தொடர்ந்து குளம் சீரமைப்பு பணியினை மேற்கொள்ள தன்னார்வலர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி வளாகத்தில் டெக் கார்டு லேப்ஸ் அறக்கட்டளை துவக்க விழா

Sri Ramakrishna Engineering College SREC Spark வளாகத்தில் Tech Card Labs Foundation துவக்க விழா நடைபெற்றது. இந்தியா-இஸ்ர...

கோவையில் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனவர்

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனவர் மற்றும் மாநகராட்சி ஆணையர் M Sivaguru Prabhakaran ஆகியோர் மாநகராட்சி...

கோவை போத்தனூரில் கட்டுமான தளத்தில் பணியாற்றிய இளைஞர் திடீர் மரணம்

கோவை போத்தனூர் கிரீன் பார்க் பகுதியில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த வெள்ளலூரை சேர்ந்த 29 வயது இளைஞர் சந்தோஷ் திடீரென ம...

போதைப் பொருட்கள் தடுப்புப் படை: கோவையில் சிறப்புப் படையினர் தயார் நிலையில்!

கோவை மாநகர மற்றும் மாவட்ட காவல்துறையினர், முதல்வர் ஜோசப் விஜய் அறிவித்த போதைப் பொருட்கள் தடுப்புப் படை மற்றும் சிங்கப் ப...

கோவை மாநகராட்சி: குடிநீர் குறைகளை மண்டல வாரிய எண்களில் தெரிவிக்கலாம்

கோவை மாநகராட்சி ஆணையர் M Sivaguru Prabhakaran, குடிநீர் விநியோகம் தொடர்பான குறைகளை மண்டல வாரியாக தெரிவிக்க பொதுமக்களுக்க...

கோவையில் ரூ.9.90 கோடியில் பாரா ஒலிம்பிக் உள் விளையாட்டு வளாகம் அமைக்கப்படுகிறது

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ஜீவா நகர் பகுதியில் மாற்றுத்திறனாளிகளுக்கான உலகத்தரம் வாய்ந்த பா...