திமுக ஆட்சியில் பெண்கள் மற்றும் முதியவர்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு - வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு

மத்திய அரசு மாநில அரசுக்கு பணம் கொடுக்கவில்லை என்று பொய் சொல்லி வருகிறார்கள். ஜி.எஸ்.டி கலந்தாய்வில் தமிழ அரசு கலந்து கொள்ளலாமல் புறக்கணித்து விட்டு தற்போது மத்திய அரசை குறை சொல்லி வருகிறது என்று சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் புகார் தெரிவித்துள்ளார்.


கோவை: பப்ளிக் பாலிசி ரிசர்ச் சென்டர் எனும் மய்யம் தயாரித்த 'லட்சியங்களை கைவிட்ட திமுக' எனும் அறிக்கையை பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கோவை ராம் நகரில் உள்ள தனியார் விடுதியில்இன்று (ஏப்ரல்.16) வெளியிட்டார்.



பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன், ஒரு மாநிலத்தின் வளர்ச்சிக்கு தேவைப்படுவதை மாநில அரசு புறக்கணித்து விட்டது. விவசாயிகளுக்கான நீர் ஆதாரம் குறைந்து உள்ளது. தமிழ்நாடு வளர்ந்து விட்டது என்று திமுக பொய் சொல்லி வருகின்றனர்.



ஆன்மீக சுற்றுலா பயணிகள் மூலம் தமிழ்நாட்டில் அதிக வருவாய் கிடைக்கிறது. ஆனால் திமுக அரசு கோவில்களை இடிப்பது, கடவுள்களை கொச்சை படுத்தி இழிவாக பேசி வருகின்றனர். திமுக ஆட்சியில் தொழில்கள் குறைந்து உள்ளது. இதனால் இளைஞர்களுக்கு தொழில் மற்றும் வேலை வாய்ப்புகள் குறைந்துவிட்டது.



மத்திய அரசு மாநில அரசுக்கு பணம் கொடுக்கவில்லை என்று பொய் சொல்லி வருகிறார்கள். ஜி.எஸ்.டி கலந்தாய்வில் தமிழ அரசுகலந்து கொள்ளலாமல் புறக்கணித்து விட்டு தற்போது மத்திய அரசை குறை சொல்லி வருகிறது.கர்நாடகாவில் காங்கிரஸ் அமைந்த பிறகு காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுக்கிறார்கள். அது குறித்து அமைச்சர் துரைமுருகன் சட்ட பேரவையில் ஏதும் பேசாமல் அமைதி காத்து வருகிறார்.தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களும், முதியோர்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து விட்டது என்று கூறினார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...