வாக்களிக்க சொந்த ஊருக்கு புறப்பட்ட பிற மாவட்ட தொழிலாளர்கள் - திருப்பூர் ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசல்

திருப்பூரில் இருந்து வெளி மாவட்ட தொழிலாளர்கள் வாக்களிக்க சொந்த ஊருக்கு புறப்பட்டதால் இன்று வழக்கத்துக்கு மாறாக நாகர்கோவில் எக்ஸ்பிரஸ், திருச்சி எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது.


திருப்பூர்: பின்னலாடை நகரமான திருப்பூரில் அதிகளவிலான வெளி மாவட்ட மற்றும் வெளி மாநில தொழிலாளர்கள் தங்கி பணியாற்றி வருகின்றனர். குறிப்பாக தென் மாவட்டங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் திருப்பூரில் தங்கி பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் நாளை தமிழகம், புதுச்சேரி உட்பட ஐந்து மாநிலங்களில் தேர்தல் நடைபெறுகிறது.



தேர்தலை முன்னிட்டு வாக்களிக்க ஆர்வம் காட்டும் தொழிலாளர்கள் திருச்சி, மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில் உள்ளிட்ட தங்களது சொந்த ஊருக்கு ரயில் மற்றும் பேருந்துகள் மூலம் புறப்பட துவங்கினர்.

இதனால் இன்று வழக்கத்துக்கு மாறாக நாகர்கோவில் எக்ஸ்பிரஸ், திருச்சி எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்களில் அதிகளவிலான பொதுமக்கள் கூட்டம் காணப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...