உடுமலை அருகே பாசனத்திற்கு கால்வாயில் தண்ணீர் திறக்க கோரி விவசாயிகள் சாலை மறியல்

அரசாணையில் ஐந்து நாட்கள் தண்ணீர் வழங்க வேண்டும் என உத்தரவு இருக்கும் நிலையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தன்னிச்சையாக முடிவெடுத்து நான்கு நாட்களில் தண்ணீர் நிறுத்தம் செய்துள்ளதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்தி அணை மூலம் பெதம்பம்பட்டி அருகில் உள்ள ஜே கிருஷ்ணாபுரம் கிளை வாய்க்கால் மூலம் 6500 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறுகின்றன. இந்த நிலையில் திருமூர்த்தி அணையில் இருந்து முதலாம் ஆண்டு பாசனத்தில் இரண்டாம் சுற்றில் ஜே கிருஷ்ணாபுரம் கிளை கால்வாய் பகுதியில் பாசனத்திற்கு ஐந்து நாட்கள் தண்ணீரை வழங்க வேண்டிய நிலையில், தற்சமயம் நான்கு நாட்கள் மட்டும் வழங்கி விட்டு தண்ணீர் முன்னறிவிப்பின்றி வாய்க்காலில் தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது.

இதனால் பயிர்கள் காய்ந்து வருகின்றன. அரசாணையில் ஐந்து நாட்கள் தண்ணீர் வழங்க வேண்டும் என உத்தரவு இருக்கும் நிலையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தன்னிச்சையாக முடிவெடுத்து தண்ணீர் நிறுத்தம் செய்துள்ளனர். இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது உரிய பதிலளிக்க காரணத்தால் ஆத்திரம் அடைந்த விவசாயிகள் தண்ணீர் திறக்க வலியுறுத்தி உடுமலை செஞ்சேரிமலை சாலையில் நூற்றுக்கு மேற்பட்ட விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்துக்கு வந்த பொது பணித்துறை அதிகாரிகள் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது தண்ணீர் முறையாக வழங்கப்படும் என உத்தரவாதம் அளித்ததால் விவசாயிகள் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டனர்.



உடுமலை அருகே சாலை மறியல் போராட்டம் காரணமாக உடுமலை செஞ்சேரி சாலையில் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...