வால்பாறையில் வாக்குசாவடி மையங்களில் தேர்தல் ஏற்பாடுகள் தீவிரம் - தேர்தல் அதிகாரி வாசுதேவன் விளக்கம்

வால்பாறை மேல்பகுதியில் வனவிலங்குகளால் ஏதேனும் அச்சுறுத்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக கருதப்படும் ஷேக்கல்முடி, மானாம்பள்ளி, சக்தி, ஹைபாரஸ்ட் உள்ளிட்ட நான்கு வாக்குசாவடி மையங்களில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரி வாசுதேவன் தெரிவித்தார்.


கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட வால்பாறை சட்டமன்ற தொகுதி மேற்பகுதியில் உள்ள சுமார் 68 வாக்கு மையங்களுக்கான வாக்களிக்கும் இயந்திரங்கள் காவல் துறையினரின் முழு பாதுகாப்புடன் அந்தந்த மையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ள நிலையில் இது பற்றி தேர்தல் அதிகாரி வாசுதேவன் கூறும்போது, வாக்கு மையங்களில் வாக்காளர்களின் வசதிகளுக்காக குடிநீர்வசதி, பாத்ரூம் வசதி, முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வாகனம் மற்றும் சக்கர நாற்காலி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், வாக்கு இயந்திரங்கள் ஒரு வேளை பழுதானால் அதற்கான மாற்று இயந்திரங்களும் தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிவித்தார்.



வால்பாறை சட்டமன்ற தொகுதியில் மொத்தம் சுமார் 1 லட்சத்து 97 ஆயிரத்து 950 வாக்காளர்களில் ஆண் வாக்காளர்கள் 94 ஆயிரத்து 127 பேர்களும், பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 3 ஆயிரத்து 800 பேர்களும் மூன்றாம் பாலினத்தவர்கள் 23 பேர்களும் உள்ளனர் என்றும், 324 பணியாளர்கள் வாக்கு மையங்களில் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் துணை ராணுவம் மற்றும் காவல் துறையினரின் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

வால்பாறை மேல்பகுதியில் வனவிலங்குகளால் ஏதேனும் அச்சுறுத்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக கருதப்படும் ஷேக்கல்முடி, மானாம்பள்ளி,சக்தி, ஹைபாரஸ்ட் உள்ளிட்ட நான்கு வாக்கு சாவடி மையங்களில் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதாகவும், எனவே தேர்தல் நாளான நாளை வாக்காளர்கள் அனைவரும் தவறாமல் வாக்களித்து தங்களின் ஜனநாயக கடமையாற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

Newsletter

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...