கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழையால் நீர்வரத்து தொடர்கிறது. விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நீர்வளத்துறை அதிகாரிகள் விவரம் அளித்தனர்.
Coimbatore: கோவை மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின் நீர்மட்ட நிலவரம் ஜூலை 25ஆம் தேதியின்படி வெளியிடப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை காரணமாக அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து கிடைத்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஆனைமலையை அடுத்துள்ள ஆழியார் அணையின் மொத்த கொள்ளளவு 120 அடியாகும். அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து வரும் நீர் வரத்தால் இன்றைய நிலவரப்படி 55.5 அடியாக நீர்மட்டம் உள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 239 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து 250 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. மழைப்பொழிவு குறைந்ததால் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து குறைந்து வருவதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பொள்ளாச்சி அருகே அமைந்துள்ள பரம்பிக்குளம் அணையின் மொத்த கொள்ளளவு 72 அடியாகும். இன்றைய நிலவரப்படி நீர்மட்டம் 22.37 அடியை எட்டியுள்ளது. மேலும் அணைக்கு வினாடிக்கு 1098 கன அடி நீர் வரத்து உள்ளது. 40 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. தென்மேற்கு பருவமழையால் நீர்மட்டம் தொடர்ந்து உயரும் நிலையில் உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வால்பாறை அருகேயுள்ள சோலையாறு அணையின் மொத்த கொள்ளளவு 160 அடியாகும். இந்த அணையின் இன்றைய நிலவரப்படி நீர்மட்டம் 71.85 அடியை எட்டியுள்ளது. மேலும் சோலையாறு அணைக்கு வினாடிக்கு 276 கன அடி நீர் வரத்து உள்ளது. 1384 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. தொடர்ந்து அணையின் நீர்மட்டம் உயரும் நிலையில் உள்ளது என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தென்மேற்கு பருவமழை தொடர்வதால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால், விவசாயத்திற்கு தேவையான நீர் வசதி கிடைக்கும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து நீர்மட்ட நிலவரத்தை கண்காணித்து வருகின்றனர்.
ஆனைமலையை அடுத்துள்ள ஆழியார் அணையின் மொத்த கொள்ளளவு 120 அடியாகும். அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து வரும் நீர் வரத்தால் இன்றைய நிலவரப்படி 55.5 அடியாக நீர்மட்டம் உள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 239 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து 250 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. மழைப்பொழிவு குறைந்ததால் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து குறைந்து வருவதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பொள்ளாச்சி அருகே அமைந்துள்ள பரம்பிக்குளம் அணையின் மொத்த கொள்ளளவு 72 அடியாகும். இன்றைய நிலவரப்படி நீர்மட்டம் 22.37 அடியை எட்டியுள்ளது. மேலும் அணைக்கு வினாடிக்கு 1098 கன அடி நீர் வரத்து உள்ளது. 40 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. தென்மேற்கு பருவமழையால் நீர்மட்டம் தொடர்ந்து உயரும் நிலையில் உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வால்பாறை அருகேயுள்ள சோலையாறு அணையின் மொத்த கொள்ளளவு 160 அடியாகும். இந்த அணையின் இன்றைய நிலவரப்படி நீர்மட்டம் 71.85 அடியை எட்டியுள்ளது. மேலும் சோலையாறு அணைக்கு வினாடிக்கு 276 கன அடி நீர் வரத்து உள்ளது. 1384 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. தொடர்ந்து அணையின் நீர்மட்டம் உயரும் நிலையில் உள்ளது என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தென்மேற்கு பருவமழை தொடர்வதால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால், விவசாயத்திற்கு தேவையான நீர் வசதி கிடைக்கும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து நீர்மட்ட நிலவரத்தை கண்காணித்து வருகின்றனர்.