திமுக அரசின் சாதனைகளுக்கு பெண்கள் மிக பெரிய ஆதரவு - பொள்ளாச்சியில் திமுக வேட்பாளார் ஈஸ்வரசாமி பேட்டி

திமுக அரசு செயல்படுத்திய திட்டங்களுக்கும், சாதனைகளுக்கும் பெண்கள் பெரும் வரவேற்பு அளித்து வருவதாகவும், பொள்ளாச்சி தொகுதியில் திமுகவின் வெற்றி பிரகாசமாக இருப்பதாகவும் திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமி தெரிவித்தார்.


கோவை: தமிழக முழுவதும் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் உள்ள ஆறு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட 1715 வாக்குச்சாவடிகளில் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.



இந்த நிலையில் பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமி வாக்குச்சாவடி மையங்களில் ஆய்வு மேற்கொண்டார். பொள்ளாச்சி கோட்டூர் ரோடு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடிகளுக்குச் சென்ற வேட்பாளர் ஈஸ்வரசாமி அங்குள்ள வாக்குசாவடி அதிகாரிகளிடமும், திமுக முகவர்களிடமும் வாக்குப்பதிவு குறித்து கேட்டறிந்தார்.

இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வேட்பாளர் ஈஸ்வரசாமி, காலை 6 மணி முதல் பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருவதாகவும், தமிழகத்தில் கடந்து 3 ஆண்டுகளாக திமுக அரசு செய்த திட்டங்களுக்கும், சாதனைக்கும் பெண்கள் பெரும் வரவேற்பு அளித்து வருவதாகவும், பொள்ளாச்சி தொகுதியில் திமுகவின் வெற்றி பிரகாசமாக இருப்பதாகவும் வேட்பாளர் ஈஸ்வரசாமி தெரிவித்தார். இவருடன் பொள்ளாச்சி நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன், நகர செயலாளர் நவநீதகிருஷ்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...