கோவையில் பேருந்தில் சென்ற மூதாட்டியிடம் 3 பவுன் தங்க செயின் பறிப்பு

பஸ்சில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி மூதாட்டியிடம் 3 பவுன் செயின் பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபரை பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.


கோவை: கோவை பீளமேடு பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தியின் மனைவி பங்கஜம்(73). இவர் நேற்று ஏப்ரல்.22 மணீஸ் தியேட்டர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து பஸ்சில் சென்று கொண்டிருந்தார். அப்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர் அவரது கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க செயினை பறித்து சென்று விட்டார்.

பின்னர் ஆர்கே மில் நிறுத்தத்தில் இறங்கிய போது மூதாட்டி தனது கழுத்தில் இருந்த செயினை காணாதது கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே அவர் இது குறித்து பீளமேடு போலீஸ் நிலையத்தில் நேற்று புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை திருடிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...