வெள்ளக்கோவிலில் கிணற்றில் தவறி விழுந்து இரண்டு சிறுவர்கள் பலி - காவல்துறை விசாரணை

கிணற்றில் விழுந்து உயிரிழந்த இரண்டு சிறுவர்களின் உடலை சுமார் 1.30 மணி நேரத்திற்கும் மேலாக தேடி தீயணைப்புத்துறையினர் மீட்டனர். பின்னர் சிறுவர்களின் உடல்களை காங்கேயம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.


திருப்பூர்: காங்கேயம் அடுத்த வெள்ளகோவில் உப்புபாளையம் காலனியை சேர்ந்த பிரகாஷ் என்பவரது மகன் கோகுல் (8), ஜெயக்குமாரின் மகன் அஸ்வின் (8) ஆகிய இரு சிறுவர்கள் 3 வகுப்பு படித்து வருகிறார்கள். தற்போது பள்ளி கோடை விடுமுறை என்பதால் தங்களுடைய சைக்கிள் வைத்து விளையாடிக் கொண்டிருந்தனர். அபெபோது திடீரென காணவில்லை என அக்கம்பக்கம் தேடிய நிலையில் வெள்ளகோவில் காவல் நிலையத்தில் சிறுவர்களின் பெற்றோர்கள் புகார் அளித்துள்ளனர்.

இந்நிலையில் இவர்கள் வீட்டிலிருந்து சுமார் 1 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தனியாருக்கு சொந்தமான கிணற்றின் அருகே சைக்கிள் மற்றும் சிறுவர்களின் துணிகள் கிடந்துள்ளது. இதை அடுத்து சிறுவர்கள் கிணற்றில் உள்ளே இறங்கி இருக்கலாம் என்ற கோணத்தில் வெள்ளகோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.



சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் பிரபாகரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் கிணற்றிற்குள் இறங்கி தீவிரமாக தேடினர். பின்னர் சுமார் 1.30 மணி நேரத்திற்கு பிறகு இரண்டு சிறுவர்களின் உடலையும் சடலமாக மீட்டு காங்கேயம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

ஒரே பகுதியில் இரண்டு சிறுவர்கள் கிணற்றில் விழுந்து பலியானது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. வெள்ளகோவில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். தற்போது கோடைவிடுமுறை என்பதால் பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகள் மற்றும் சிறுவர்களை பாதுகாப்புடன் வைக்க வேண்டும், இதுபோல் நீர்நிலைகள் குறித்தும் அதில் உள்ள ஆபத்துக்கள் குறித்தும் எடுத்தது கூறவேண்டும், ஒவ்வொரு ஆண்டும் இதுபோல் பள்ளிகள் கோடை விடுமுறை விடும் போதும் இது போல் குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் பலியாவது வேதனையளிக்கின்றது.

Newsletter

செவித்திறன் குறைபாடுடையோருக்கு வேலைவாய்ப்பு: Lakshmi Ring Travellers நிறுவனத்தின் 'நம்ம லாண்டரி' சேவை

கோவையில் Lakshmi Ring Travellers நிறுவனம், செவித்திறன் மற்றும் பேச்சுத்திறன் குறைபாடுடையோருக்காக 'நம்ம லாண்டரி' என்ற சலவ...

மேட்டுப்பாளையம் தொகுதியில் டி.ஆர்.எஸ் சுயேட்சை வேட்பாளராக களமிறக்கம்

மேட்டுப்பாளையம் தொகுதியில் திமுக போட்டியிட வாய்ப்பு மறுத்ததால், கட்சியை விட்டு வெளியேறிய டி.ஆர். சண்முகசுந்தரம் இன்று சு...

மேட்டுப்பாளையம் தொகுதியில் Kavitha Kalyanasundaram வேட்பு மனு தாக்கல்

கோவை வடக்கு மாவட்டம் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் Kavitha Kalyanasundar...

மேட்டுப்பாளையம் தொகுதி அதிருப்திக்குப் பிறகு ராஜினாமா: திமுக T R சண்முகசுந்தரம் தனியாக போட்டி?

குடும்ப சூழ்நிலை மற்றும் பணி சுமை காரணமாக திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் பதவியிலிருந்தும் கட்சியிலிருந்தும் TR சண்முகச...

கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக வேட்பாளர் கனிமொழி வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கனிமொழி, சனிக்கிழமை கோட்டாட்சியர் வ...

கோவை வடக்கில் போட்டியிடும் வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி பதிவு

பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், கோவை வடக்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்த கட்சித் தலைவர்களுக்கு நன்ற...