வெள்ளக்கோவிலில் கிணற்றில் தவறி விழுந்து இரண்டு சிறுவர்கள் பலி - காவல்துறை விசாரணை

கிணற்றில் விழுந்து உயிரிழந்த இரண்டு சிறுவர்களின் உடலை சுமார் 1.30 மணி நேரத்திற்கும் மேலாக தேடி தீயணைப்புத்துறையினர் மீட்டனர். பின்னர் சிறுவர்களின் உடல்களை காங்கேயம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.


திருப்பூர்: காங்கேயம் அடுத்த வெள்ளகோவில் உப்புபாளையம் காலனியை சேர்ந்த பிரகாஷ் என்பவரது மகன் கோகுல் (8), ஜெயக்குமாரின் மகன் அஸ்வின் (8) ஆகிய இரு சிறுவர்கள் 3 வகுப்பு படித்து வருகிறார்கள். தற்போது பள்ளி கோடை விடுமுறை என்பதால் தங்களுடைய சைக்கிள் வைத்து விளையாடிக் கொண்டிருந்தனர். அபெபோது திடீரென காணவில்லை என அக்கம்பக்கம் தேடிய நிலையில் வெள்ளகோவில் காவல் நிலையத்தில் சிறுவர்களின் பெற்றோர்கள் புகார் அளித்துள்ளனர்.

இந்நிலையில் இவர்கள் வீட்டிலிருந்து சுமார் 1 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தனியாருக்கு சொந்தமான கிணற்றின் அருகே சைக்கிள் மற்றும் சிறுவர்களின் துணிகள் கிடந்துள்ளது. இதை அடுத்து சிறுவர்கள் கிணற்றில் உள்ளே இறங்கி இருக்கலாம் என்ற கோணத்தில் வெள்ளகோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.



சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் பிரபாகரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் கிணற்றிற்குள் இறங்கி தீவிரமாக தேடினர். பின்னர் சுமார் 1.30 மணி நேரத்திற்கு பிறகு இரண்டு சிறுவர்களின் உடலையும் சடலமாக மீட்டு காங்கேயம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

ஒரே பகுதியில் இரண்டு சிறுவர்கள் கிணற்றில் விழுந்து பலியானது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. வெள்ளகோவில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். தற்போது கோடைவிடுமுறை என்பதால் பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகள் மற்றும் சிறுவர்களை பாதுகாப்புடன் வைக்க வேண்டும், இதுபோல் நீர்நிலைகள் குறித்தும் அதில் உள்ள ஆபத்துக்கள் குறித்தும் எடுத்தது கூறவேண்டும், ஒவ்வொரு ஆண்டும் இதுபோல் பள்ளிகள் கோடை விடுமுறை விடும் போதும் இது போல் குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் பலியாவது வேதனையளிக்கின்றது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...