நாளை (25.04.2024) மதியம் 3.50 மணிக்கு பெங்களூரில் இருந்து கிளம்பும் சிறப்பு ரயில் இரவு 8.03 மணிக்கு சேலம், 9.03 மணிக்கு ஈரோடு, 9.48 மணிக்கு திருப்பூர் மற்றும் இரவு 10.53 மணிக்கு கோவை வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை: ஏப்ரல் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் பெங்களூரு மற்றும் கேரளா இடையே சிறப்பு ரயில் சேவை கோவை வழியே ரயில்வே துறையால் இன்று (ஏப்ரல்.24) அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நாளை (25.04.2024) மதியம் 3.50 மணிக்கு பெங்களூரில் இருந்து கிளம்பும் இந்த சிறப்பு ரயில் (வண்டி என். 06549) இரவு 8.03 மணிக்கு சேலம், 9.03 மணிக்கு ஈரோடு, 9.48 மணிக்கு திருப்பூர் மற்றும் இரவு 10.53 மணிக்கு கோவை வந்தடைந்து, மறுநாள் (26.04.2024) வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு கேரளாவில் உள்ள கொச்சுவேலி ரயில் நிலையத்திற்கு வந்து சேரும்.
அதன் பின்னர் அன்று காலை 8 மணிக்கே மீண்டும் கொச்சுவேலியில் இருந்து புறப்பட்டு அன்று மதியம் 4 .20 மணிக்கே கோவை ரயில் நிலையம் வந்து சேரும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன் பின்னர் அன்று காலை 8 மணிக்கே மீண்டும் கொச்சுவேலியில் இருந்து புறப்பட்டு அன்று மதியம் 4 .20 மணிக்கே கோவை ரயில் நிலையம் வந்து சேரும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.