சாவித்திரி நகர் பழைய டாஸ்மாக் கடை அருகே போதைப்பொருளை விற்பனைக்காக வைத்திருந்த நபரை பிடித்து போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.
கோவை: ராமநாதபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கஸ்தூரி அங்குள்ள சாவித்திரி நகர் பழைய டாஸ்மாக் கடை அருகே கடந்த 25ம் தேதி இரவு ரோந்து சுற்றி வந்தார். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து சோதனை செய்தார்.
அவரிடம் 5 கிராம் போதைப்பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவரை கைது செய்தனர். மேலும் விசாரணையில் அவர் அம்மன்குளம் கொண்ட சாமி லே அவுட்டை சேர்ந்த சண்முகம் என்ற விக்கு (25) என்பது தெரியவந்தது. பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை சிறையில் அடைத்தனர்.
அவரிடம் 5 கிராம் போதைப்பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவரை கைது செய்தனர். மேலும் விசாரணையில் அவர் அம்மன்குளம் கொண்ட சாமி லே அவுட்டை சேர்ந்த சண்முகம் என்ற விக்கு (25) என்பது தெரியவந்தது. பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை சிறையில் அடைத்தனர்.